எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரையில் வேட்பாளர்களை விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு சில வேட்பாளர்களுக்கு விசாரணைகளுக்காக அழைப்பு விடுத்திருந்தது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சிலருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தேர்தல்களுக்கு முன்னதாக விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
எனினும், தேர்தல் முடிவடையும் வரையில் வேட்பாளர்களை அழைக்க வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சில வேட்பாளர்கள் தம்மிடம் முறையிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், அடுத்த வாரம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுத்ததனை நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு உறுதி செய்யவில்லை.
