தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுபானம் வழங்குவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.
ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மதுபானத்தை விநியோகம் செய்து அரசியல் பிரச்சாரம் செய்யும் வேட்பாளர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்ககுமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
இதற்கு மேலதிகமாக இந்த விடயம் குறித்து விசாரணை நடத்துமாறு கலால் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுளேன். குறித்த மாகாணங்களில் பெரும் எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரப் பணிகளுக்காக மதுபான விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மதுபானம் விநியோகம் செய்யும் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
