Featured Home (TOP)

Recent Comments

Monday, August 3, 2015

avathani Media Network

தேர்தல் பிரசாரத்தில் குர்ஆன் அவமதிப்பு - பொது ஜன பெரமுனவுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடமும் தேர்தல் ஆணையாளரிடமும் முறைப்பாடு

தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தின் போது அல்­குர்­ஆனை அவ­ம­திக்கும் வகை­யி­லான கருத்­துக்­களைத் தெரி­வித்த அநு­ரா­பு­தர மாவட்ட பொது ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் ஒரு­வ­ருக்கு எதி­ராக நேற்று பொலிஸ் தலை­மை­ய­கத்­திலும் தேர்தல் திணைக்­க­ளத்­திலும் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.
பொது பல சேனா அமைப்பின் அர­சியல் கட்­சி­யான பொது ஜன பெர­முன (பி.ஜே.பி) சார்பில் அநு­ரா­த­புரம் மாவட்­டத்தில் 'நாக பாம்பு' சின்­னத்தில் போட்­டி­யிடும் சுசந்த ரண்­முத்து குமா­ர­ண­சிங்க எனும் வேட்­பா­ள­ருக்கு எதி­ரா­கவே இந்த முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இம் முறைப்­பாட்­டினை ஆர்.ஆர்.டி. அமைப்பின் சார்பில் அதன் உறுப்­பி­ன­ரான ஏ.ஆர்.எம்.சபீன் நேற்று பொலிஸ் தலை­மை­ய­கத்­திலும் தேர்தல் ஆணை­யா­ள­ரி­டமும் நேரில் கைய­ளித்தார். இவ­ருடன் ஆர்.ஆர்.டி. அமைப்பின் சட்­டத்­த­ர­ணி­க­ளான ருஷ்தி ஹபீப், ஸப்ராஸ் ஹம்ஸா ஆகி­யோரும் உடன் சென்­றி­ருந்­தனர்.

இதே­வேளை இவ் விடயம் தொடர்­பான மற்­று­மொரு முறைப்­பாட்டை ஆர்.ஆர்.டி. அமைப்பின் உறுப்­பி­ன­ரான காதர் முஹை­தீனும் நேற்று தேர்தல் ஆணை­யா­ள­ரிடம் கைய­ளித்­துள்ளார்.

மூன்­றா­வது முறைப்­பாடு இன்­றைய தினம் முன்­னணி பெண் செயற்­பாட்­டாளர் ஒரு­வரால் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக ஆர்.ஆர்.டி அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் தெரி­வித்தார்.

குறித்த வேட்­பா­ளரால் கடந்த 29 ஆம் திகதி தேர்தல் பிர­சா­ரத்தை நோக்­காகக் கொண்டு சமூக ஊட­கங்கள் வாயி­லாக வெளி­யி­டப்­பட்ட வீடியோ பதிவு ஒன்­றி­லேயே அவர் அல்­குர்­ஆ­னையும் முஸ்­லிம்­க­ளையும் அவ­ம­திக்கும் வகையில் கருத்­துக்­களை முன்­வைத்­துள்ளார்.

அதில், முஸ்­லிம்­களை மரக்­க­லயா என்றும் தமி­ழர்­களை தெமலுன் என்றும் வர்­ணித்­துள்ள அவர், அல்­குர்ஆன் தொடர்பில் தவ­றான கருத்­துக்­களை முன்­வைத்­துள்ளார். '' ஒரு நாட்டில் வாழும் முஸ்­லிம்­களின் சனத்­தொகை 50 வீதத்தை விட அதி­க­ரித்தால் அங்கு வாழும் முஸ்­லி­மல்­லா­த­வர்கள் அனை­வரும் கொல்­லப்­பட வேண்டும்.

இதுவே அல்­லாஹ்வின் விருப்­ப­மாகும்'' என அல்­குர்­ஆனில் கூறப்­பட்­டுள்­ள­தாக அவர் குறித்த வீடியோ பதிவில் தெரி­வித்­துள்ளார்.


இவை உட்­பட மொத்­த­மாக 6 விட­யங்கள் சட்­டத்­துக்குப் புறம்­பான முறையில் குறித்த வீடி­யோவில் இடம்­பெற்­றுள்­ள­தாக இம் முறைப்­பாட்டில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை நேற்­றைய தினம் நேர­டி­யாக முறைப்­பாட்டைப் பொறுப்­பேற்ற தேர்தல் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய, குறித்த வீடியோ பதிவை முழு­மை­யாக பார்­வை­யிட்­ட­துடன்  இது தொடர்பில் இன்று திங்கட் கிழமை இடம்பெறவுள்ள கட்சிச் செயலாளர்களின் கூட்டத்தில் கலந்துரையாடுவதாக உறுதியளித்தார். 

அத்துடன் குறித்த வேட்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் முறைப்பாட்டாளர்களிடம் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :