கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கட்டடத்துக்குள் சட்டவிரோதமாக புகுந்து குழப்பம் விளைவித்த பொதுபலசேனா அமைப்பின் பௌத்த குருமார்கள் பொலிஸாரால் அவர்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை மன்னிப்பு கோரி சமாதானமாக தீர்த்துக் கொள்ள கொழும்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியிடம் அனுமதி கோரிய போதும் நீதிவான் அதற்கான அனுமதியை மறுத்துள்ளார்.
நேற்றுக் காலை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பொதுபலசேனாவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வழக்கை சமாதானமாக தீர்த்துக் கொள்ள விரும்புவதாகவும் அதற்காக மன்னிப்பு கோர தயாராக இருப்பதாகவும் நீதிவானிடம் தெரிவித்தார்.
குறிப்பிட்ட 6 பௌத்த குருமார்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் ஒன்றான சட்டவிரோதமாக ஒன்று கூடியமை மன்னிக்கக் கூடிய ஒரு குற்றச் செயலல்ல எனத் தெரிவித்த நீதிவான் அந்தக் குற்றம் குற்றப் பத்திரிகையிலிருந்தும் நீக்கப்பட்டால் மாத்திரமே மன்னிப்புக் கோரி சமாதானமாக வழக்கினைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.
Source - vidivelli.lk
