Featured Home (TOP)

Recent Comments

Tuesday, August 25, 2015

avathani Media Network

அமைச்சர்கள் நாளை அல்லது நாளை மறுதினம் பதவியேற்கலாம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் நாளை அல்லது நாளை மறுதினம் பதவியேற்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மூன்று அமைச்சர்கள் நேற்றைய தினம் பதவியேற்ற நிலையிலேயே ஏனையவர்கள் நாளை அல்லது நாளை மறுதினம் பதவியேற்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அமைச்சர்களின் நியமனம் தொடர்பிலும் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரம சிங்கவிற்குமிடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாகவும்,
இதன்போது இறுதி தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதற்கமைய 30 அமைச்சர்களும் 40 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அத்துடன் ஜக்கிய தேசியக் கட்சியிலிருந்து 15 அமைச்சர்களும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து 15 அமைச்சர்களும் பதவியேற்கவுள்ள நிலையில் நேற்று ஜக்கிய தேசியக் கட்சியின் 3 பேர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்களாக 50 பேர் நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்த சட்டத்திற்கு அமைய அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட வேண்டும்.
எனினும் தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் பட்சத்தில் அதன் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என குறிப்பிடப்படுகிறது.


avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :