Featured Home (TOP)

Recent Comments

Tuesday, August 25, 2015

avathani Media Network

புனித ஹஜ் கடமையினை மேற்கொள்வதற்கு புனித மக்கா செல்லவுள்ள ஹாஜிகளுக்கு பொதுப் பிரியாவிடை நிகழ்வும் (முஸாபஹா) செய்யும் வைபவமும் -படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு - காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இவ்வருடம் புனித ஹஜ் கடமையினை மேற்கொள்வதற்காக புனித மக்கா செல்லவுள்ள ஹாஜிகளுக்கு பொதுப் பிரியாவிடை நிகழ்வும் (முஸாபஹா) செய்யும் வைபவமும் கடந்த 21 வெள்ளிக்கிழமை இஷாத் தொழுகையின் பின்னர் காத்தான்குடி ஜாமிஉழ்ழாபிரீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.

இதன் போது புனித மக்கா செல்லவுள்ள ஹாஜிகளை உலமாக்கள்,பொது மக்கள் முஸாபஹா செய்து கொண்டனர்.

இந் நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் ,காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் (பலாஹி) ,காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி) உட்பட சம்மேளன உறுப்பினர்கள், உலமாக்கள், உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இம்முறை புனித ஹஜ் கடமையினை மேற்கொள்வதற்காக காத்தான்குடியில் இருந்து 52ஆண்களும் 54பெண்களும் புனித மக்காவுக்கு  செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.











avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :