Featured Home (TOP)

Recent Comments

Friday, September 18, 2015

avathani Media Network

நிந்தவூரில் மர்ஹும் அஷ்றப் அவர்களின் 15வது நினைவுதின நிகழ்வும், விசேட துஆப் பிராத்தனையும். - பிரதம பேச்சாளராக பிரதியமைச்சர் பைசால் காசீம் -

 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்எம்.அஷ்றப் அவர்களின் 15வது நினைவு தினமும், விசேட துஆப் பிராத்தனை நிகழ்வும் இன்று நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரி ஆராதனை மண்டபத்தில் இடம் பெற்றது.

கல்லூரி அதிபர் எஸ்.எம்.ஜாபீர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்திய பிரதியமைச்சருமான எம்.சீ.பைசால் காசீம் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்வுகளில் கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், முன்னாள் அதிபர் எம்.எம்.றகீம், சங்கைக்குரிய உலமா கமறுத்தீன் மௌலவி உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டு மர்ஹும் அஷ்றப் அவர்களின் நினைவுப் பேருரைகளை நிகழ்த்தினர்.

இறுதியில் சங்கைக்குரிய உலமா கமறுத்தீன் மௌலவி அவர்களினால் மர்ஹும் அஷ்றப் அவர்களின் ஆத்மசாந்திக்கான விசேட துஆப் பிரார்த்தனையொன்றும் இடம் பெற்றது.







avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :