( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்எம்.அஷ்றப் அவர்களின் 15வது நினைவு தினத்தை முன்னிட்டு கத்தமுல் குர்ஆன் வைபவமும், விசேட துஆப் பிராத்தனை நிகழ்வும் இன்று நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்தியத்துறை பிரதியமைச்சருமான எம்.சீ.பைசால் காசீம் அவர்களின் ஏற்பாட்டிலான இந்நிகழ்வுகளில் ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபச் செயலாளரும், உயர்பீட உறுப்பினருமாகிய சட்டத்தரணி.எஸ்.எம்.ஏ.கபூர் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வுகளில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச்.ஏ.சத்தார், நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல், நிந்தவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.ஹமாம், பிரதேச சபை உறுப்பினர் எம்.ரி.ஜப்பார் அலி, கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியில் சங்கைக்குரிய உலமா அல்ஹாபீஸ்.றிபாய் மௌலவி தலைமையிலான காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி மாணவர்களினால் அல்குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டு, மர்ஹும் அஷ்றப் அவர்களின் ஆத்மசாந்திக்கான விசேட துஆப் பிரார்த்தனையும் இடம் பெற்றது.