தொடர்ந்து மழையுடனான காலநிலையின் காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடர்ந்தும் மழை பெய்யும் எனவும் இரத்தினபுரி, பதுளை, கேகாலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக் கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
