ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் விவகாரத்தை இன்னும் நீடித்துக் கொண்டு போவதற்கு நாங்கள் விரும்பவில்லை.
பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வில் எனது சகோதரர் ஹபீஸ் தனது கன்னியுரையையும், கடைசி உரையையும் நிகழ்த்துவார்.
அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமாச் செய்வார். அதன் பின்னர் உரியவர்களுக்கு வழங்குவோம். யாருக்கு வழங்குவது என இதுவரை முடிவு செய்யவில்லை.
மசூறா அடிப்படையிலேயே முடிவு செய்வோம். எங்களோடு தேர்தல் உடன்படிக்கைகளை செய்து கொண்ட அமைப்புக்களுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை சுழற்சி அடிப்படையில் வழங்குவது பற்றியும் ஆலோசனை செய்து கொண்டிருக்கின்றோம் என நகர அபிவிருத்தி, திட்டமிடல், நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும், மு.கா.வின் தலைவருமான ரவூப் ஹக்கீம் நேற்று முன் தினம் (13.09.2015) மாலை கல்முனை நகர அபிவிருத்தி தொடர்பாக விளக்கம் அளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கல்முனை ஆசாத் மண்டபத்தில் நடைபெற்ற இவ்வூடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தலின் போது பிரதமர் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக கல்முனை நகரை நவீன முறையில் அபிவிருத்தி செய்து புதிய கல்முனை நகரை கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளோம். இதற்காக நடவடிக்கைகள் யாவும் எடுக்கப்பட்டு வருகின்றன.
நகர அபிவிருத்தி திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சினூடாக கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டம் பற்றியதொரு பூர்வாங்க ஆலோசனைக் கூட்டமொன்றினை நடத்தினோம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நான் நடத்திய பிரத்தியேக சந்திப்பின் போது கல்முனை நகர அபிவிருத்திக்கு தனியார் காணிகளை சுவீகரிப்பது பற்றியும், நஷ்டஈடு சம்பந்தமான நெருக்கடிகள் போன்ற விடயங்களை ஒழுங்குபடுத்திச் செய்யக் கூடியவாறான ஒரு திட்டம் பற்றியும் பேசினோம். நஷ்டஈடு வழங்குவதற்கு வங்கி முறிகளை வழங்க எண்ணியுள்ளோம். அவர்கள் அவற்றை தேவையான நேரத்தில் பணமாக்கிக் கொள்வதற்கு ஏற்ற வகையிலும், அதற்கு வட்டியும் வழங்க ஏற்பாடு செய்யப்படுமென்று பிரதம மந்திரி என்னிடம் கூறியிருந்தார்.
கல்முனை நகரை அபிவிருத்தி செய்வதற்கு ஏற்கனவே நாங்கள் 80 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கு தீர்மானங்களை எடுத்துள்ளோம். இதற்கு மேலதிகமாக சுமார் 800 ஏக்கர் நிலப் பரப்பில் புதிய கல்முனை நகர அபிவிருத்தியை செய்வதற்கான ஆரம்ப வரை படங்களும், அவற்றை நகர அபிவிருத்தி அதிகார சபை மூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக காணி மீட்டல் அதிகார கூட்டுத்தாபனத்தின் உதவியோடு சுமார் 200 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்குரிய ஆரம்ப மதீப்பீடுகளை செய்யுமாறு இன்றைய கலந்துரையாடலில் பணித்துள்ளோம்.
இச்சந்திப்பில் நீர்ப்பாசன திணைக்களம், விவசாய திணைக்கம், காணி மீட்டல் அதிகார கூட்டுத்தாபனம், நகர அபிவிருத்தி அதிகார சபை, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஆகியவற்றுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டோம்.
இதே வேளை, கல்முனை நகர அபிவிருத்திக்கான நிதியை இவ்வருட வரவு – செலவு திட்டத்தில் பிரத்தியேக நிதி ஒதுக்கீட்டினை பெற்றுக் கொள்வதற்கான மதிப்பீட்டினை சமர்ப்பிக்குமாறும் பணித்துள்ளோம்.
தற்போதுள்ள கல்முனை பிரதான வீதிக்கு மாற்று வீதியாக பிரதான வீதிக்கு சமாந்தரமான 60 அடி அகலமுடைய வீதியை அமைப்பதற்கு எண்ணியுள்ளோம். இவ்வீதியை காரைதீவு – மாவடிப்பள்ளி வீதியில் இணைப்பதற்கு திட்ட வரைபுகள் வரையவுள்ளோம்.
இது தேர்தலின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக மேற்கொள்ளப்படுகின்றது.
கல்முனை புதிய நகரம் எல்லா வசதிகளையும் கொண்டதொரு நவீன நகரமாக கட்டியெழுப்பப்படும். இந்த விவகாரங்களுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்எம்.எம்.ஹரீஸ் பொறுப்பாக இருப்பார். அவர் மேலதிக கூட்டங்களை நடத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவார்.
இதே போன்று சம்மாந்துறை பிரதேசத்திலும் அபிவிருத்திகளை மேற்கொள்ளவுள்ளோம். இதற்காக 30 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். சம்மாந்துறைக்குரிய பொதுக் கட்டிடங்களை அமைப்பதற்குரிய காணிகளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.
வெள்ள அபாய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் தீர்மானித்துள்ளோம். இது பற்றிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டுள்ளார்கள்.
அடுத்த வாரம் முதல் விவசாயிகள், காணிச் சொந்தக்காரர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கும் திட்டமிட்டுள்ளோம். இதே போன்று அம்பாரை மாவட்டத்தில் ஏனைய இடங்களிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.
பொத்துவில் பிரதேசத்தில் புதிய பஸ் தரிப்பு நிலையம், விளையாட்டு மைதானம் போன்றன அமைவதோடு, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் புதிய நவீன வசதிகளுடனான சந்தைக் கட்டிடங்களும், பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டிடமும் அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றோம்.
இதே போன்று நிந்தவூர் கடற்கரை பிரதேசத்தில் ஒரு விளையாட்டு அரங்கு, சிறுவர் பூங்கா ஆகியவற்றை அமைக்கவுள்ளோம். சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி சம்பந்தமாக ஏற்கனவே காணி மீட்டல் கூட்டுத்தாபனத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்ட வேலையை அடுத்த வருடம் முதல் மேற்கொள்ளவுள்ளோம்.
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர் பிரதேசங்களில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம். திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டுள்ள வேலைகளை மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.
பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வில் எனது சகோதரர் ஹபீஸ் தனது கன்னியுரையையும், கடைசி உரையையும் நிகழ்த்துவார்.
அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமாச் செய்வார். அதன் பின்னர் உரியவர்களுக்கு வழங்குவோம். யாருக்கு வழங்குவது என இதுவரை முடிவு செய்யவில்லை.
மசூறா அடிப்படையிலேயே முடிவு செய்வோம். எங்களோடு தேர்தல் உடன்படிக்கைகளை செய்து கொண்ட அமைப்புக்களுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை சுழற்சி அடிப்படையில் வழங்குவது பற்றியும் ஆலோசனை செய்து கொண்டிருக்கின்றோம் என நகர அபிவிருத்தி, திட்டமிடல், நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும், மு.கா.வின் தலைவருமான ரவூப் ஹக்கீம் நேற்று முன் தினம் (13.09.2015) மாலை கல்முனை நகர அபிவிருத்தி தொடர்பாக விளக்கம் அளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கல்முனை ஆசாத் மண்டபத்தில் நடைபெற்ற இவ்வூடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தலின் போது பிரதமர் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக கல்முனை நகரை நவீன முறையில் அபிவிருத்தி செய்து புதிய கல்முனை நகரை கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளோம். இதற்காக நடவடிக்கைகள் யாவும் எடுக்கப்பட்டு வருகின்றன.
நகர அபிவிருத்தி திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சினூடாக கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டம் பற்றியதொரு பூர்வாங்க ஆலோசனைக் கூட்டமொன்றினை நடத்தினோம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நான் நடத்திய பிரத்தியேக சந்திப்பின் போது கல்முனை நகர அபிவிருத்திக்கு தனியார் காணிகளை சுவீகரிப்பது பற்றியும், நஷ்டஈடு சம்பந்தமான நெருக்கடிகள் போன்ற விடயங்களை ஒழுங்குபடுத்திச் செய்யக் கூடியவாறான ஒரு திட்டம் பற்றியும் பேசினோம். நஷ்டஈடு வழங்குவதற்கு வங்கி முறிகளை வழங்க எண்ணியுள்ளோம். அவர்கள் அவற்றை தேவையான நேரத்தில் பணமாக்கிக் கொள்வதற்கு ஏற்ற வகையிலும், அதற்கு வட்டியும் வழங்க ஏற்பாடு செய்யப்படுமென்று பிரதம மந்திரி என்னிடம் கூறியிருந்தார்.
கல்முனை நகரை அபிவிருத்தி செய்வதற்கு ஏற்கனவே நாங்கள் 80 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கு தீர்மானங்களை எடுத்துள்ளோம். இதற்கு மேலதிகமாக சுமார் 800 ஏக்கர் நிலப் பரப்பில் புதிய கல்முனை நகர அபிவிருத்தியை செய்வதற்கான ஆரம்ப வரை படங்களும், அவற்றை நகர அபிவிருத்தி அதிகார சபை மூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக காணி மீட்டல் அதிகார கூட்டுத்தாபனத்தின் உதவியோடு சுமார் 200 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்குரிய ஆரம்ப மதீப்பீடுகளை செய்யுமாறு இன்றைய கலந்துரையாடலில் பணித்துள்ளோம்.
இச்சந்திப்பில் நீர்ப்பாசன திணைக்களம், விவசாய திணைக்கம், காணி மீட்டல் அதிகார கூட்டுத்தாபனம், நகர அபிவிருத்தி அதிகார சபை, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஆகியவற்றுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டோம்.
இதே வேளை, கல்முனை நகர அபிவிருத்திக்கான நிதியை இவ்வருட வரவு – செலவு திட்டத்தில் பிரத்தியேக நிதி ஒதுக்கீட்டினை பெற்றுக் கொள்வதற்கான மதிப்பீட்டினை சமர்ப்பிக்குமாறும் பணித்துள்ளோம்.
தற்போதுள்ள கல்முனை பிரதான வீதிக்கு மாற்று வீதியாக பிரதான வீதிக்கு சமாந்தரமான 60 அடி அகலமுடைய வீதியை அமைப்பதற்கு எண்ணியுள்ளோம். இவ்வீதியை காரைதீவு – மாவடிப்பள்ளி வீதியில் இணைப்பதற்கு திட்ட வரைபுகள் வரையவுள்ளோம்.
இது தேர்தலின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக மேற்கொள்ளப்படுகின்றது.
கல்முனை புதிய நகரம் எல்லா வசதிகளையும் கொண்டதொரு நவீன நகரமாக கட்டியெழுப்பப்படும். இந்த விவகாரங்களுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்எம்.எம்.ஹரீஸ் பொறுப்பாக இருப்பார். அவர் மேலதிக கூட்டங்களை நடத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவார்.
இதே போன்று சம்மாந்துறை பிரதேசத்திலும் அபிவிருத்திகளை மேற்கொள்ளவுள்ளோம். இதற்காக 30 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். சம்மாந்துறைக்குரிய பொதுக் கட்டிடங்களை அமைப்பதற்குரிய காணிகளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.
வெள்ள அபாய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் தீர்மானித்துள்ளோம். இது பற்றிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டுள்ளார்கள்.
அடுத்த வாரம் முதல் விவசாயிகள், காணிச் சொந்தக்காரர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கும் திட்டமிட்டுள்ளோம். இதே போன்று அம்பாரை மாவட்டத்தில் ஏனைய இடங்களிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.
பொத்துவில் பிரதேசத்தில் புதிய பஸ் தரிப்பு நிலையம், விளையாட்டு மைதானம் போன்றன அமைவதோடு, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் புதிய நவீன வசதிகளுடனான சந்தைக் கட்டிடங்களும், பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டிடமும் அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றோம்.
இதே போன்று நிந்தவூர் கடற்கரை பிரதேசத்தில் ஒரு விளையாட்டு அரங்கு, சிறுவர் பூங்கா ஆகியவற்றை அமைக்கவுள்ளோம். சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி சம்பந்தமாக ஏற்கனவே காணி மீட்டல் கூட்டுத்தாபனத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்ட வேலையை அடுத்த வருடம் முதல் மேற்கொள்ளவுள்ளோம்.
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர் பிரதேசங்களில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம். திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டுள்ள வேலைகளை மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.
