Featured Home (TOP)

Recent Comments

Tuesday, September 15, 2015

avathani Media Network

தேசியப் பட்­டி­யலை சுழற்சி முறையில் வழங்­கு­வது பற்­றியும் ஆலோ­சிக்­கிறோம் : ஹக்கீம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தேசிய பட்­டியல் விவ­கா­ரத்தை இன்னும் நீடித்துக் கொண்டு போவ­தற்கு நாங்கள் விரும்­ப­வில்லை.

பாரா­ளு­மன்­றத்தின் அடுத்த அமர்வில் எனது சகோ­தரர் ஹபீஸ் தனது  கன்­னி­யு­ரை­யையும், கடைசி உரை­யையும் நிகழ்த்­துவார்.

அவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யையும் இரா­ஜி­னாமாச் செய்வார். அதன் பின்னர் உரி­ய­வர்­க­ளுக்கு வழங்­குவோம். யாருக்கு வழங்­கு­வது என இது­வரை முடிவு செய்­ய­வில்லை.

மசூறா அடிப்­ப­டை­யி­லேயே முடிவு செய்வோம். எங்­க­ளோடு தேர்தல் உடன்­ப­டிக்­கை­களை செய்து கொண்ட அமைப்­புக்­க­ளுக்கு பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்தை சுழற்சி அடிப்­ப­டையில் வழங்­கு­வது பற்­றியும் ஆலோ­சனை செய்து கொண்­டி­ருக்­கின்றோம் என  நகர அபி­வி­ருத்தி, திட்­ட­மிடல், நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்­சரும், மு.கா.வின் தலை­வ­ரு­மான ரவூப் ஹக்கீம் நேற்று முன் தினம் (13.09.2015) மாலை கல்­முனை நகர அபி­வி­ருத்தி தொடர்­பாக விளக்கம் அளிக்கும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் தெரி­வித்தார். 

கல்­முனை ஆசாத் மண்­ட­பத்தில் நடை­பெற்ற இவ்­வூ­ட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போது அவர் மேலும் தெரி­விக்­கையில்,
தேர்­தலின் போது பிர­தமர் வழங்­கிய வாக்­கு­று­திக்கு அமை­வாக கல்­முனை நகரை நவீன முறையில் அபி­விருத்தி செய்து புதிய கல்­முனை நகரை கட்­டி­யெ­ழுப்ப திட்­ட­மிட்­டுள்ளோம். இதற்­காக நட­வ­டிக்­கைகள் யாவும் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

நகர அபி­விருத்தி திட்­ட­மிடல் நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்­சி­னூ­டாக கல்­முனை புதிய நகர அபி­வி­ருத்தித் திட்டம் பற்­றி­ய­தொரு பூர்­வாங்க ஆலோ­சனைக் கூட்­ட­மொன்­றினை நடத்­தினோம்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை காலை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் நான் நடத்­திய பிரத்­தி­யேக சந்­திப்பின் போது கல்­முனை நகர அபி­வி­ருத்­திக்கு தனியார் காணி­களை சுவீ­க­ரிப்­பது பற்­றியும், நஷ்­ட­ஈடு சம்­பந்­த­மான நெருக்­க­டிகள் போன்ற விட­யங்­களை ஒழுங்­கு­ப­டுத்திச் செய்யக் கூடி­ய­வா­றான ஒரு திட்டம் பற்றியும் பேசினோம். நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தற்கு வங்கி முறி­களை வழங்க எண்­ணி­யுள்ளோம். அவர்கள் அவற்றை தேவை­யான நேரத்தில் பண­மாக்கிக் கொள்­வ­தற்கு ஏற்ற வகை­யிலும், அதற்கு வட்­டியும் வழங்க ஏற்­பாடு செய்­யப்­ப­டு­மென்று பிர­தம மந்­திரி என்னிடம் கூறி­யி­ருந்தார்.

கல்­முனை நகரை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு ஏற்­க­னவே நாங்கள் 80 ஏக்கர் காணியை சுவீ­க­ரிப்­ப­தற்கு தீர்­மா­னங்­களை எடுத்­துள்ளோம். இதற்கு மேல­தி­க­மாக சுமார் 800 ஏக்கர் நிலப் பரப்பில் புதிய கல்­முனை நகர அபி­வி­ருத்­தியை செய்­வ­தற்­கான ஆரம்ப வரை படங்­களும், அவற்றை நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை மூலம் வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிப்­ப­தற்கும் ஏற்­க­னவே நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

முதற்­கட்­ட­மாக காணி மீட்டல் அதி­கார கூட்­டுத்­தா­ப­னத்தின் உத­வி­யோடு  சுமார் 200 ஏக்கர் காணி­களை சுவீ­க­ரிப்­ப­தற்­கு­ரிய ஆரம்ப மதீப்­பீ­டு­களை செய்­யு­மாறு இன்­றைய கலந்­து­ரை­யா­டலில் பணித்­துள்ளோம்.

இச்­சந்­திப்பில் நீர்ப்­பா­சன திணைக்­களம், விவ­சாய திணைக்கம், காணி மீட்டல் அதி­கார கூட்­டுத்­தா­பனம், நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை, நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு சபை ஆகி­ய­வற்­றுடன் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டோம்.

இதே வேளை, கல்­முனை நகர அபி­வி­ருத்­திக்­கான நிதியை இவ்­வ­ருட வரவு – செலவு திட்­டத்தில் பிரத்­தி­யேக நிதி ஒதுக்­கீட்­டினை பெற்றுக் கொள்­வ­தற்­கான மதிப்­பீட்­டினை சமர்ப்­பிக்­கு­மாறும் பணித்­துள்ளோம்.

தற்­போ­துள்ள கல்­முனை பிர­தான வீதிக்கு மாற்று வீதி­யாக பிர­தான வீதிக்கு சமாந்­த­ர­மான 60 அடி அக­ல­மு­டைய வீதியை அமைப்­ப­தற்கு எண்­ணி­யுள்ளோம். இவ்­வீ­தியை காரை­தீவு – மாவ­டிப்­பள்ளி வீதியில் இணைப்­ப­தற்கு திட்ட வரை­புகள் வரை­ய­வுள்ளோம்.

இது தேர்­தலின் போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வழங்­கிய வாக்­கு­று­திக்கு அமை­வாக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.

கல்­முனை புதிய நகரம் எல்லா வச­தி­க­ளையும் கொண்­ட­தொரு நவீன நக­ர­மாக கட்­டி­யெ­ழுப்­பப்­படும். இந்த விவ­கா­ர­ங்­க­ளுக்கு விளை­யாட்­டுத்­துறை பிரதி அமைச்சர் எச்எம்.எம்.ஹரீஸ் பொறுப்­பாக இருப்பார். அவர் மேல­திக கூட்­டங்­களை நடத்தி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளவார்.

இதே போன்று சம்­மாந்­துறை பிர­தே­சத்­திலும் அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்­ள­வுள்ளோம். இதற்­காக 30 ஏக்கர் காணியை சுவீ­க­ரிப்­ப­தற்கு திட்­ட­மிட்­டுள்ளோம். சம்­மாந்­து­றைக்­கு­ரிய பொதுக் கட்­டி­டங்­களை அமைப்­ப­தற்­கு­ரிய காணி­களை பெற்றுக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வுள்ளோம்.

வெள்ள அபாய தடுப்பு நட­வ­டிக்­கை­களை எடுக்­கவும் தீர்­மா­னித்­துள்ளோம். இது பற்­றிய நட­வ­டிக்­கை­களை சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் மேற்­கொண்­டுள்­ளார்கள்.

அடுத்த வாரம் முதல் விவ­சா­யிகள், காணிச் சொந்­தக்­கா­ரர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொள்­வ­தற்கும் திட்­ட­மிட்­டுள்ளோம். இதே போன்று அம்­பாரை மாவட்­டத்தில் ஏனைய இடங்­க­ளிலும் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வுள்ளோம்.

பொத்­துவில் பிர­தே­சத்தில் புதிய பஸ் தரிப்பு நிலையம், விளை­யாட்டு மைதானம் போன்­றன அமை­வ­தோடு, அட்­டா­ளைச்­சேனை பிர­தே­சத்தில் புதிய நவீன வச­தி­க­ளு­ட­னான சந்தைக் கட்­டி­டங்­களும், பிர­தேச செய­ல­கத்­திற்­கான புதிய கட்­டி­டமும் அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­தி­ருக்­கின்றோம். 

இதே போன்று நிந்­தவூர் கடற்­கரை பிர­தே­சத்தில் ஒரு விளை­யாட்டு அரங்கு, சிறுவர் பூங்கா ஆகி­ய­வற்றை அமைக்­க­வுள்ளோம். சாய்ந்­த­ம­ருது தோணா அபி­வி­ருத்தி சம்பந்தமாக ஏற்கனவே காணி மீட்டல் கூட்டுத்தாபனத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்ட வேலையை அடுத்த வருடம் முதல் மேற்கொள்ளவுள்ளோம்.

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர் பிரதேசங்களில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம். திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டுள்ள வேலைகளை மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :