Featured Home (TOP)

Recent Comments

Saturday, September 5, 2015

avathani Media Network

பெளஸி, டிலான், அமுனுகம, விஜிதமுனி: அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை!

புதிய அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான ஏ.எச்.எம். பெளஸி, சரத் அமுனுகம, டிலான் பெரேரா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் விஜித் விஜித முனித சொய்சா ஆகி யோருக்கு நேற்று அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை.
புதிய அமைச்சரவை நேற்று ஜனாதிபதி தலைமையில் பதவி ஏற்றது. இதன் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 11 எம்.பி.களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களாக மேற்படி ஐந்து எம்.பிகளுக்கும் அமைச் சுப் பதவிகள் வழங்கப்படாதது குறிப் பிடத்தக்கது.
இது தொடர்பாக வினவியதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பெளசி, அமைச்சு நியமனம் தொடர்பாக ஜனாதிபதி தன்னுடன் பேசியதாகவும் தேசியப் பட்டியலினூடாக தெரிவு செய் யப்பட்ட அனைவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்க முடியாதிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பான பிரேர ணைக்கு ஆதரவாக வாக்களித்த எம்.பிகள் குறித்தும் கவனம் செலுத்தியே அமைச்சு பதவிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஏனைய அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் பதவி ஏற்க இருப்பதாக அறிய வருகிறது.
கடந்த பொதுத் தேர்தலில் தோல்விய டைந்த 7 எம்.பிக்கள் தேசியப் பட்டிய லினூடாக தெரிவானதோடு அவர்களில் எஸ்.பி. திசாநாயக்க, மஹிந்த சமரசிங்க ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன.
இதேவேளை தேசிய அரசாங்கத்தில் இணைந்த இ.தொ.க. செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், ஈ.பி.டி.பி. செயலாளர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :