மாத்தளை, கந்தேநுவர தோட்டத்தில் அமைந்துள்ள நூர் ஜும்ஆ பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணியை தோட்டத்தில் தொழில் புரியும் மாற்று மதத்தவர் ஒருவர் சட்டவிரோதமாக வீடொன்றினைக் கட்டி உரிமை கொண்டாடி வருவதாக கந்தேநுவர பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வீடு பள்ளிவாசலுக்குச் சொந்தமான மையவாடிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலியை எவரும் அப்புறப்படுத்தாத வகையில் வேலிக்கு மின்சாரக் கம்பிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிவாசல் நிர்வாக சபைத்தலைவர் ஐ.நஸுர்தீன் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
ஒரு ஏக்கர் 2 ரூட் பரப்பளவைக் கொண்ட இக்காணி 1963ஆம் ஆண்டு மர்ஹூம் மீசான் ஹாஜியாரால் பள்ளிவாசலுக்கு வக்பு செய்யப்பட்டதாகும். பள்ளிவாசல் வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
3 மாதங்களுக்கு முன்பு நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ்வீட்டில் மாற்று மதத்தவர், குடியிருக்காது விட்டாலும் அப்புறப்படுத்திக் கொள்ள மறுத்து உரிமை கொண்டாடி வருகிறார். இப்பகுதியில் 56 முஸ்லிம் குடும்பங்கள் இருக்கின்றன.
குடும்பத்திலுள்ளவர்கள் பெரும்பாலானோர் அருகிலுள்ள நகரத்துக்கும் தோட்டத்துக்கும் வேலைக்குச் செல்வதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டே இவ்வீடு கட்டப்பட்டுள்ளது எனவும் ஐ.நஸுர்தீன் தெரிவித்தார்.
காணி பள்ளிவாசலுக்குச் சொந்தமானது என்பதற்கான காணி உறுதி, வரைபடம், பள்ளிவாசல் பதிவு போன்ற ஆவணங்கள் எம்மிடம் இருந்தும் பொலிஸார் கட்டப்பட்டுள்ள வீட்டுக்கு எதிராகவும், சம்பந்தப்பட்டவருக்கு எதிராகவும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய சட்டநடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்கு பள்ளிவாசல் நிர்வாக சபை இன்று வெள்ளிக்கிழமை கூடவுள்ளது.
கட்டப்பட்டுள்ள வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலிக்கு மின்சாரம் பாய்ச்சிய கம்பிகள் இணைக்கப்பட்டிருப்பது மிகவும் ஆபத்தானதெனவும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source - vidivelli.lk
குறிப்பிட்ட வீடு பள்ளிவாசலுக்குச் சொந்தமான மையவாடிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலியை எவரும் அப்புறப்படுத்தாத வகையில் வேலிக்கு மின்சாரக் கம்பிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிவாசல் நிர்வாக சபைத்தலைவர் ஐ.நஸுர்தீன் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
ஒரு ஏக்கர் 2 ரூட் பரப்பளவைக் கொண்ட இக்காணி 1963ஆம் ஆண்டு மர்ஹூம் மீசான் ஹாஜியாரால் பள்ளிவாசலுக்கு வக்பு செய்யப்பட்டதாகும். பள்ளிவாசல் வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
3 மாதங்களுக்கு முன்பு நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ்வீட்டில் மாற்று மதத்தவர், குடியிருக்காது விட்டாலும் அப்புறப்படுத்திக் கொள்ள மறுத்து உரிமை கொண்டாடி வருகிறார். இப்பகுதியில் 56 முஸ்லிம் குடும்பங்கள் இருக்கின்றன.
குடும்பத்திலுள்ளவர்கள் பெரும்பாலானோர் அருகிலுள்ள நகரத்துக்கும் தோட்டத்துக்கும் வேலைக்குச் செல்வதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டே இவ்வீடு கட்டப்பட்டுள்ளது எனவும் ஐ.நஸுர்தீன் தெரிவித்தார்.
காணி பள்ளிவாசலுக்குச் சொந்தமானது என்பதற்கான காணி உறுதி, வரைபடம், பள்ளிவாசல் பதிவு போன்ற ஆவணங்கள் எம்மிடம் இருந்தும் பொலிஸார் கட்டப்பட்டுள்ள வீட்டுக்கு எதிராகவும், சம்பந்தப்பட்டவருக்கு எதிராகவும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய சட்டநடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்கு பள்ளிவாசல் நிர்வாக சபை இன்று வெள்ளிக்கிழமை கூடவுள்ளது.
கட்டப்பட்டுள்ள வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலிக்கு மின்சாரம் பாய்ச்சிய கம்பிகள் இணைக்கப்பட்டிருப்பது மிகவும் ஆபத்தானதெனவும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source - vidivelli.lk
