ஆயுள்வேத உடல் சிகிச்சை நிலையம் என்ற பெயரில் நடைபெற்று வந்த விபசார விடுதி ஒன்றை முற்றுகையிட்டு அங்கிருந்த பெண்களை கைது செய்துள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
ராஜகிரிய, எதுல்கோட்டை பகுதியிலுள்ள இயங்கிய விபசார விடுதியொன்றே இவ்வாறு பொலிஸாரால் சுற்றவளைக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆண் நபரும் நான்கு பெண்களும் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
