ஒலுவில் கிராமத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
ஒலுவில் தேத்தாவடி வீதியைச் சேர்ந்த பாறூக் முஹம்மது பாயிஸ் (வயது 21) என்ற இளைஞனே மேற்படி சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்தவராவார்.
ஒலுவில் பிரதேசத்தின் ஓ.பி.ஏ.வீதியிடாக துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த மேற்படி இளைஞனை பனை மரத்திலிருந்த 30 க்கும் மேற்பட்ட குளவிக் கூட்டம் தாக்கியுள்ளது.
குளவிக் கொட்டுக்கு ஆளான மேற்படி இளைஞர் ஒலுவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.