வலம்புரி கவிதா வட்டத்தின் மாதாந்த நிகழ்வான திறந்த வெளி கவியரங்கு கடந்த பௌர்ணமி தினம் கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றது.
புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அரங்கில் நடைபெற்ற நிகழ்வுக்கு வகவத் தலைவர் என்.நஜ்முல் ஹுசைன் தலைமை தாங்கினார். வகவ ஸ்தாபகத் தலைவர் வைத்திய கலாநிதி தாசிம் அகமது பிரதம அதிதியாக கலந்து புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் பற்றி சிறப்புரையாற்றினார்.
20வது சிறப்புக் கவியரங்கம் கவிஞர் ஈழகணேஷ் தலைமை தாங்க மிகவும் சுவாரஷியமாக நடைபெற்றது. கவிஞர்கள் கலைவாதி கலீல், பிரேம்ராஜ், துபாயிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்த கலைநிலா சாதிக்கீன், வெளிமடை ஜஹாங்கீர், கலாபூஷணம் மஸீதா அன்சார், தெல்தொட்டை பாத்திமா இஸ்ரா, கவிக்கமல் ரசீம், எஸ்.தனபாலன், வெலிப்பன்ன அத்தாஸ் ஆகியோர் கவிதை பாடினர்.
கவிஞர் தாசிம் அகமது தனது சிறப்புரையில், “புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களின் மாணவன் என்று சொல்வதில் நான் பெருமை கொள்கிறேன். தமிழ் இலக்கியத்திலும், இஸ்லாமிய இலக்கியத்திலும் பெரும் பாண்டித்தியம் பெற்ற ஷரிபுத்தீன் அவர்கள் தமிழ் மொழியை அட்சர சுத்தமாக உச்சரிப்பதில் புகழ்ப்பெற்றவர்.
அவரது வயதான காலத்தில்கூட அவரது உச்சரிப்பு அவ்வாறே இருந்தது. 1909ம் ஆண்டு மே மாதம் 4ம் திகதி ஆதம்பாவா, பாத்திமா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். பயிற்றப்பட்ட தமிழாசிரியராகவும், வட்டாரக் கல்வி அதிகாரியுமாகத் திகழ்ந்தார். கல்வி அதிகாரியாக இருந்த வேளையிலும் துவிச்சக்கர வண்டியிலேயே பயணம் செய்பவராக இருந்தார். புதுக்குஷ்ஷாம், சீறாப்புராணம் ஆகியவற்றுக்கு சிறப்பான உரை செய்தவர். விபுலாநந்த அடிகளின் மாணவரான புலவர்மணி யாப்பிலக்கணத்தில் புலியாகத் திகழ்ந்தார். புலவர்மணி ஆ.பெரியதம்பிப்பிள்ளை ஆ.மு.ஷரிபுத்தீனின் வெண்பா படைக்கும் ஆற்றலைக் கண்டு வியந்தார்.
“வெண்பாவில் எனைநீ வென்றாய் ஷரிபுத்தீன்
நண்பாவென் நாமம் உனக்களித்தேன் - பண்பாள
வாழிஅரபு தமிழ் உள்ளவும் வாழிநீ
வாழி நமதன்பு மலர்ந்து”
எனப் பாராட்டி தனக்கிருந்த புலவர்மணி பட்டத்தை ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களுக்கும் சூட்டி மகிழ்ந்தார்.
புகழ்ப்பெற்ற நன்மாணக்கர் பலரை ஷரிபுத்தீன் அவர்கள் உருவாக்கினார். அன்னாரது தமிழ்ப் பணியைப் பாராட்டி கொழும்பு தமிழ்ச்சங்கம் அவரது படத்தை 1999ல் திரை நீக்கம் செய்தது. எமது வகவம் ஆரம்பத்தில் நடாத்திய வருடாந்த பரிசளிப்பு விழாவிலும் சிறப்பதிதியாக கலந்து எம்மை கௌரவித்திருக்கிறார். அந்த பெரும் புலவர் 2000ம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இன்றும் அவர் வழியில் அவரது மைந்தன் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் நடைபோடுவது எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது “ என்றார்
நிகழ்வில் கலந்து கொண்ட புலவர்மணியின் மற்றொரு மாணவரும், கல்விமானும், மருதானை தொழில் நுட்பக் கல்லூரி, இக்ரஃ தொழில் நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் அதிபராக கடமை புரிந்தவருமான அல்ஹாஜ் எம்.எச்.ஏ.சமத் தனது ஆசானைப் பற்றி சில வார்த்தைகளில் விதந்துரைத்தார். தான் இன்று ஒரு கல்விமானாக திகழ்வதற்கு மூலகாரணமே புலவர்மணிதான் என்றும், தான் அமெரிக்காவில் ஒரு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டபோது ஒரு சிறு கம்பித் துண்டைத் தந்து 20 நிமிடத்துக்குள் 100 வசனம் எழுதச் சொன்னபோது 18 நிமிடத்துக்குள் அதனை எழுதி முடித்து ஒப்படைத்தபோது அமெரிக்க பேராசிரியர் ஆச்சரியப்பட்டார்;. எப்படி உன்னால் முடிந்தது என்று கேட்டபோது எங்களது ஆசான் ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்கள் “சந்தர்ப்பம் கூறுக” என்று ஒவ்வொரு பொருளைத் தருவார். அதற்காக பல புத்தகங்களை ஆராய்வோம். அந்தப் பயிற்சியே இதனை எனக்கு இலகுவாக்கியது என்று சொன்னபோது அப் பேராசிரியர் மலைத்துப் போனார். அமெரிக்கர்களையே மலைக்க வைத்த பெருந்தகை எமது பேராசான் புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் என்று குறிப்பிட்டார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியின்போது நடைபெறும் சிங்கள கவிஞர்களின் கவியரங்கில் தமிழ்க் கவிஞர்களும் கவிதை பாடுவதற்கு வாய்ப்பினைப் பெற்றுத் தந்ததற்காகவும்; அவர்களது கவிதைகளை சிங்களத்தில் மொழி பெயர்த்து வாசிக்கச் செய்தமைக்காகவும், அதுபோன்றே சிங்கள கவிஞர்களின் கவிதைகளை தமிழில் மொழி பெயர்க்கச் செய்து வாசிக்கவைத்தமைக்காகவும் கவிஞர் மேமன் கவி, செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீனின் வரவேற்புரையிலும், தலைவரின் தலைமை உரையிலும் மிகவும் சிலாகித்துக் கூறப்பட்டார்.
இதுவரை காலமாக சிங்கள கவிஞர்களால் மாத்திரமே உள்வாங்கப்பட்ட “கவிதைச்சுவரிலே”, இம்முறை தமிழ்க் கவிஞர்களும் உள்வாங்கப்படுவதற்கு காரணமாயிருந்தவர் கவிஞர் மேமன்கவி. அக்கவிதைகளை நூலுருபடுத்துவதிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். சிங்கள தமிழ் கவிஞர்களின் இணைப்புப் பாலமாக செயல்பட்ட அவர் பெரிதும் போற்றப்பட்டார். அத்துடன் வகவக் கவிஞர் பிரேம்ராஜ் அங்கு சிறந்த சிங்களத் தமிழ் மொழிப்பெயர்ப்பாளராகவும் அடையாளங் காணப்பட்டது விதந்துரைக்கப்பட்டது.
வகவக் கவிஞர்களான சங்கர் கைலாஷின் தாயாரின் மறைவும், கவிக்கமல் ரசீமின் மாமியாரது மறைவும் நினைவுக் கூரப்பட்டன.
அன்றைய அரங்க நாயகர் புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களது புத்திரர் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன், உடுவை தில்லைநடராஜா, காத்திபுல்ஹக் எஸ்.ஐ.நாகூர்கனி, முஸ்டீன், கனிவுமதி, இஸட்.அன்சார், வை.சுசீலா, விவேகானந்தன், சனா எம்.யெஹ்யா, எம்எச்.எம்.பைசர், ஏ.ஆர்.எம்.பரீத் போன்றோர் சபையை அலங்கரித்தனர்
புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அரங்கில் நடைபெற்ற நிகழ்வுக்கு வகவத் தலைவர் என்.நஜ்முல் ஹுசைன் தலைமை தாங்கினார். வகவ ஸ்தாபகத் தலைவர் வைத்திய கலாநிதி தாசிம் அகமது பிரதம அதிதியாக கலந்து புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் பற்றி சிறப்புரையாற்றினார்.
20வது சிறப்புக் கவியரங்கம் கவிஞர் ஈழகணேஷ் தலைமை தாங்க மிகவும் சுவாரஷியமாக நடைபெற்றது. கவிஞர்கள் கலைவாதி கலீல், பிரேம்ராஜ், துபாயிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்த கலைநிலா சாதிக்கீன், வெளிமடை ஜஹாங்கீர், கலாபூஷணம் மஸீதா அன்சார், தெல்தொட்டை பாத்திமா இஸ்ரா, கவிக்கமல் ரசீம், எஸ்.தனபாலன், வெலிப்பன்ன அத்தாஸ் ஆகியோர் கவிதை பாடினர்.
கவிஞர் தாசிம் அகமது தனது சிறப்புரையில், “புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களின் மாணவன் என்று சொல்வதில் நான் பெருமை கொள்கிறேன். தமிழ் இலக்கியத்திலும், இஸ்லாமிய இலக்கியத்திலும் பெரும் பாண்டித்தியம் பெற்ற ஷரிபுத்தீன் அவர்கள் தமிழ் மொழியை அட்சர சுத்தமாக உச்சரிப்பதில் புகழ்ப்பெற்றவர்.
அவரது வயதான காலத்தில்கூட அவரது உச்சரிப்பு அவ்வாறே இருந்தது. 1909ம் ஆண்டு மே மாதம் 4ம் திகதி ஆதம்பாவா, பாத்திமா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். பயிற்றப்பட்ட தமிழாசிரியராகவும், வட்டாரக் கல்வி அதிகாரியுமாகத் திகழ்ந்தார். கல்வி அதிகாரியாக இருந்த வேளையிலும் துவிச்சக்கர வண்டியிலேயே பயணம் செய்பவராக இருந்தார். புதுக்குஷ்ஷாம், சீறாப்புராணம் ஆகியவற்றுக்கு சிறப்பான உரை செய்தவர். விபுலாநந்த அடிகளின் மாணவரான புலவர்மணி யாப்பிலக்கணத்தில் புலியாகத் திகழ்ந்தார். புலவர்மணி ஆ.பெரியதம்பிப்பிள்ளை ஆ.மு.ஷரிபுத்தீனின் வெண்பா படைக்கும் ஆற்றலைக் கண்டு வியந்தார்.
“வெண்பாவில் எனைநீ வென்றாய் ஷரிபுத்தீன்
நண்பாவென் நாமம் உனக்களித்தேன் - பண்பாள
வாழிஅரபு தமிழ் உள்ளவும் வாழிநீ
வாழி நமதன்பு மலர்ந்து”
எனப் பாராட்டி தனக்கிருந்த புலவர்மணி பட்டத்தை ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களுக்கும் சூட்டி மகிழ்ந்தார்.
புகழ்ப்பெற்ற நன்மாணக்கர் பலரை ஷரிபுத்தீன் அவர்கள் உருவாக்கினார். அன்னாரது தமிழ்ப் பணியைப் பாராட்டி கொழும்பு தமிழ்ச்சங்கம் அவரது படத்தை 1999ல் திரை நீக்கம் செய்தது. எமது வகவம் ஆரம்பத்தில் நடாத்திய வருடாந்த பரிசளிப்பு விழாவிலும் சிறப்பதிதியாக கலந்து எம்மை கௌரவித்திருக்கிறார். அந்த பெரும் புலவர் 2000ம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இன்றும் அவர் வழியில் அவரது மைந்தன் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் நடைபோடுவது எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது “ என்றார்
நிகழ்வில் கலந்து கொண்ட புலவர்மணியின் மற்றொரு மாணவரும், கல்விமானும், மருதானை தொழில் நுட்பக் கல்லூரி, இக்ரஃ தொழில் நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் அதிபராக கடமை புரிந்தவருமான அல்ஹாஜ் எம்.எச்.ஏ.சமத் தனது ஆசானைப் பற்றி சில வார்த்தைகளில் விதந்துரைத்தார். தான் இன்று ஒரு கல்விமானாக திகழ்வதற்கு மூலகாரணமே புலவர்மணிதான் என்றும், தான் அமெரிக்காவில் ஒரு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டபோது ஒரு சிறு கம்பித் துண்டைத் தந்து 20 நிமிடத்துக்குள் 100 வசனம் எழுதச் சொன்னபோது 18 நிமிடத்துக்குள் அதனை எழுதி முடித்து ஒப்படைத்தபோது அமெரிக்க பேராசிரியர் ஆச்சரியப்பட்டார்;. எப்படி உன்னால் முடிந்தது என்று கேட்டபோது எங்களது ஆசான் ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்கள் “சந்தர்ப்பம் கூறுக” என்று ஒவ்வொரு பொருளைத் தருவார். அதற்காக பல புத்தகங்களை ஆராய்வோம். அந்தப் பயிற்சியே இதனை எனக்கு இலகுவாக்கியது என்று சொன்னபோது அப் பேராசிரியர் மலைத்துப் போனார். அமெரிக்கர்களையே மலைக்க வைத்த பெருந்தகை எமது பேராசான் புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் என்று குறிப்பிட்டார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியின்போது நடைபெறும் சிங்கள கவிஞர்களின் கவியரங்கில் தமிழ்க் கவிஞர்களும் கவிதை பாடுவதற்கு வாய்ப்பினைப் பெற்றுத் தந்ததற்காகவும்; அவர்களது கவிதைகளை சிங்களத்தில் மொழி பெயர்த்து வாசிக்கச் செய்தமைக்காகவும், அதுபோன்றே சிங்கள கவிஞர்களின் கவிதைகளை தமிழில் மொழி பெயர்க்கச் செய்து வாசிக்கவைத்தமைக்காகவும் கவிஞர் மேமன் கவி, செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீனின் வரவேற்புரையிலும், தலைவரின் தலைமை உரையிலும் மிகவும் சிலாகித்துக் கூறப்பட்டார்.
இதுவரை காலமாக சிங்கள கவிஞர்களால் மாத்திரமே உள்வாங்கப்பட்ட “கவிதைச்சுவரிலே”, இம்முறை தமிழ்க் கவிஞர்களும் உள்வாங்கப்படுவதற்கு காரணமாயிருந்தவர் கவிஞர் மேமன்கவி. அக்கவிதைகளை நூலுருபடுத்துவதிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். சிங்கள தமிழ் கவிஞர்களின் இணைப்புப் பாலமாக செயல்பட்ட அவர் பெரிதும் போற்றப்பட்டார். அத்துடன் வகவக் கவிஞர் பிரேம்ராஜ் அங்கு சிறந்த சிங்களத் தமிழ் மொழிப்பெயர்ப்பாளராகவும் அடையாளங் காணப்பட்டது விதந்துரைக்கப்பட்டது.
வகவக் கவிஞர்களான சங்கர் கைலாஷின் தாயாரின் மறைவும், கவிக்கமல் ரசீமின் மாமியாரது மறைவும் நினைவுக் கூரப்பட்டன.
அன்றைய அரங்க நாயகர் புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களது புத்திரர் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன், உடுவை தில்லைநடராஜா, காத்திபுல்ஹக் எஸ்.ஐ.நாகூர்கனி, முஸ்டீன், கனிவுமதி, இஸட்.அன்சார், வை.சுசீலா, விவேகானந்தன், சனா எம்.யெஹ்யா, எம்எச்.எம்.பைசர், ஏ.ஆர்.எம்.பரீத் போன்றோர் சபையை அலங்கரித்தனர்


