தம்புள்ளை, இனாமலுவை பிரதேசத்தில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 25 பேர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த ஏனையவர்கள் சிறு காயங்கள் என்பதனால் வேறு வாகனங்களில் சென்றுள்ளனர்.
பொலன்னறுவை, சிறிபுர வில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கெண்டிருந்த பஸ் ஒன்று, சீமேந்து ஏற்றிக் கொண்டிருந்த லொறியின் பின்பக்கமாக மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சீகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
சீகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
