Featured Home (TOP)

Recent Comments

Saturday, October 24, 2015

avathani Media Network

நவம்­பரில் இளைஞர் பாரா­ளு­மன்றத் தேர்தல்

எதிர்­வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள இளைஞர் பாரா­ளு­மன்ற தேர்­தலில் மட்டு.மாவட்­டத்­தி­லி­ருந்தும் மூவர் தேர்தல் மூலம் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக தேசிய இளைஞர் சேவைகள் மன்­றத்தின் மாவட்ட உத­விப்­ப­ணிப்­பாளர் எம்.எல்.எம்.என்.நைறுஸ் தெரி­வித்தார்.
இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்தும் இந்த இளைஞர் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் இம் மாவட்­டத்­தி­லி­ருந்தும் மூவர் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.
இதில் மண்­முனை வடக்கு, ஏறா­வூர்­பற்று, கோற­ளைப்­பற்று தெற்கு, கோற­ளைப்­பற்று, கோற­ளைப்­பற்று வடக்கு ஆகிய பிர­தேச செய­லாளர் பிரி­வு­களை உள்­ள­டக்­கி ஒரு உறுப்­பி­னரும், காத்­தான்­குடி, ஏறாவூர் நகர், கோற­ளைப்­பற்று மத்தி, கோற­ளைப்­பற்று மேற்கு ஆகிய பிர­தேச செய­லாளர் பிரி­வு­களை உள்­ள­டக்­கி ஒரு உறுப்­பி­னரும், மண்­முனை மேற்கு, மண்­முனை தென்­மேற்கு, மண்­முனை தென் எருவில் பற்று, மண்­மு­னைப்­பற்று, போர­தீ­வுப்­பற்று ஆகிய பிர­தேச செய­லாளர் பிரி­வு­களை உள்­ள­டக்கி மற்­று­மொரு உறுப்­பி­ன­ரு­மாக மூன்று பேர் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.
இந்த இளைஞர் பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுத்­தாக்கல் எதிர்­வரும் 28 ஆம் திகதி புதன்­கி­ழமை ஒவ்­வொரு பிரதே செய­ல­கத்­திலும் நடை­பெ­ற­வுள்­ளது.
இந்த தேர்தல் வேட்­பு­ம­னுப்­பத்­தி­ரத்தை ஏற்­றுக்­கொள்­வ­தற்­காக அந்­தந்தப் பிர­தேச செய­லா­ளர்கள் அல்­லது பிர­தேச செய­லா­ள­ரினால் நிய­மிக்­கப்­படும் பிர­தி­நிதி, தேசிய இளைஞர் சேவைகள் மன்­றத்தின் பிர­தேச இளைஞர் சேவைகள் அதி­காரி, பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி அல்­லது அவ­ரினால் நிய­மிக்­கப்­படும் பொலிஸ் அதி­காரி, மற்றும் அந்­தப்­பி­ர­தேச செய­லாளர் பிரி­வி­லுள்ள சமூக சேவை நிறு­வ­ன­மொன்றின் நிறை­வேற்­றுக்­குழு பிர­தி­நிதி மற்றும் பிர­தேச இளைஞர் சம்­மே­ள­னத்­தினால் நிய­மிக்­கப்­படும் தேர்­தலில் போட்­டி­யி­டாத பிர­தி­ நி­தி­ ஆகியோர் நிய­மிக்­கப்படவுள்ளனர்.
இந்த தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா ளர் இளைஞர் கழக நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பி­ன­ராக இருப்­ப­துடன் குறித்த பிர­ தேச செய­லாளர் பிரிவில் நிரந்­த­ர­மாக வசிப்­ப­வ­ராக இருத்தல் வேண்டும். அத்­து டன் குற்­றச்­செ­யல்­களில் ஈடு­ப­டா­த­வ­ராக இருத்தல் வேண்டும். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சம்மேளன பிரதிநிதி மற்றும் மாவட்ட இளைஞர் சம்மேளன தலைவர் ஆகியோர் இத் தேர்தலில் போட்டியிட முடியாது என இம் மன்றத்தின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறுஸ் மேலும் தெரிவித்தார்.
virakesary

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :