நீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் நகர திட்டமிடல் கௌரவ அமைச்சர் ரஊப்
ஹக்கீம் அவர்களிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்கள்விடுத்த வேண்டு கோளிற்கிணங்க காத்தான் குடியின் கடற்கரையில் 80 இலட்சம் ரூபா
செலவில் நிர்மானிக்கப்பட்ட நடைபாதையும், அங்கு பொருத்தப்பட்டு இருக்கின்ற
சூரிய சக்தியில் இயங்குகின்ற மின்குமிழ்களையும், நிழலுக்காக வளர்க்கப்டும்
மரங்களையும் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட், கிழக்கு
மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களும் பார்வையிட்டார்கள்.
இது மிக விரைவில் மக்கள் பாவனைக்காக மக்களிடம் கையளிக்கப்பட இருப்பதாகவும்
அங்கு தெரிவிக்கப்பட்டது.