(எமது செய்தியாளர்)
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி அக்கரைப்பற்று அஸ்சிறாஜ் மஹா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வுகள் நேற்று (01.10.2015) இடம்பெற்றது
'சிறுவர்களினூடாக சமாதானம' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மூவினத்தைச் சேர்ந்த அதிகமான சிறுவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் சிறுவர்களினால் பல்வேறுபட்ட கலை கலாசார நிகழ்வுகளும் அங்கு அரங்கேற்றப்பட்டன.
இந்நிகழ்வின் பிரதம அனுசரணையாளர்களில் ஒருவரான BCAS Kalmunai Campus நிறுவனத்தின் சார்பில் அதன் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர் பைஸர் அமான் அவர்கள் கலந்து கொண்டு சிறார்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வின் இறுதியில் ஏற்பாட்டுக் குழுவினர்களால் பிரதம அனுசரணையாளர்களில் ஒருவரான BCAS Kalmunai Campus நிறுவனத்திற்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.




