சர்வதேச சிறுவர்; தினத்தையொட்டிய kattankudyinfo.lk நடாத்திய சிறுவர் தின நிகழ்வு காத்தான்குடி கடற்கரையில் இன்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.காத்தான்குடி இன்போ நிறைவேற்றுப் பணிப்பாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இந்த சிறுவர் தின நிகழ்வில் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் பலாஹி மற்றும் மௌலவி ஏ.எல்.மின்ஹாஜுதீன் பலாஹி உட்பட அதிபர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது சிறுவர்களின் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் பங்கு பற்றிய சிறுவர்களுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கப்பட்டன.



















