(அப்துல் றஹ்மான் பரீத்)
கண்டி கலை இலக்கிய
ரசிகர் மன்றத்தின் ஏற்பாட்டில் அகிலம் சிறப்பு மலர் வெளியீடும் வைபவம் அண்மையில்
கண்டி திரித்துவக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.சிறப்பு மலரின் முதற்பிரதியை
புரவலர் ஹாஸிம் உமர் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.எஸ் இராதாகிருஷ்ணனிமிருந்து
பெறுவதையும் அருகில் பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த குமார்,முன்னாள் அமைச்சர்
பி.பி தேவராஜ்,அகிலம்
ஆசிரியர் கே.வி இராமசாமி ஆகியோர்
காணப்படுகின்றனர்.
இந்நிகழ்வில்
மாபெரும் இலக்கியப் போட்டியும் .கலை கலாசார விழாவும் இடம்பெற்றது.மாணவர்களின் கலை
நிகழ்வும் இடம்பெற்றது.பெருந்திரளான பொது
மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர் மற்றும்
அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் குத்து விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தமை
குறிப்பிடத்தக்கது
