போலி நாணயத் தாள்களுடன் நபரொருவர் எம்பிலிபிடிய நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரால் அபராதம் செலுத்துவதற்காகவே குறித்த பணம் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இவர் எம்பிலிபிடிய பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
