Featured Home (TOP)

Recent Comments

Sunday, October 4, 2015

avathani Media Network

வீட்டுத்திட்ட உதவியை வழங்க பாலியல் இலஞ்சம்;கிளிநொச்சியில் சம்பவம்

கிளி­நொச்­சியில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான வீட்­டுத்­திட்ட உத­வியை வழங்­கு­வ­தற்கு பாலியல் இலஞ்சம் கோரப்­பட்­டுள்­ள­தாக குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.கிளி­நொச்சி முழங்­காவில் பகு­தியில் மேற்­கொள்­ளப்­படும் இந்­திய வீட்­டுத்­திட்­டத்தின்
கீழான பய­னாளிப் பெண் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து பாலியல் இலஞ்சம் கோரப்­பட்­டுள்­ள­தாக தெரிய வரு­கின்­றது.
இந்த விடயம் குறித்து இலங்கை செஞ்­சி­லுவை சங்­கத்தின் கிளி­நொச்சி மாவட்ட அலு­வ­ல­கத்தில் குறித்த பெண் நேர­டி­யாக முறைப்­பாடு செய்­துள்ளார்.
இந்த வீட்­டுத்­திட்­டத்தை வடக்கில் செயற்­ப­டுத்தும் ஒரு பங்­கா­ளி­யாக இலங்கை செஞ்­சி­லுவை சங்கம் செயற்­ப­டு­கின்றது.
முழங்­காவில் பகு­தியில் இந்­திய வீட்­டுத்­திட்ட பணிகள் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.
இந்த திட்­டத்தின் கீழ் கட்டம் கட்­ட­மாக நிதி வழங்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் முதற்­கட்ட நிதிக்­கான பணிகள் நிறை­வ­டைந்து அடுத்த கட்ட நிதி வழங்­கப்­ப­ட­வுள்­ளது.
இலங்கை செஞ்­சி­லுவை சங்க கொழும்பு அதி­கா­ரி­களே நிதி விடுப்­புக்­கான அனு­ம­தியை வழங்­கு­வ­தா­கவும் அவர்­களில் இரு­வரே நிதி வழங்­கு­வ­தற்­கான பாலியல் இலஞ்சம் கோரி­னார்கள் எனவும் குறித்த பெண் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை செஞ்­சி­லுவை சங்­கத்தின் கிளி­நொச்சி மாவட்ட அலு­வ­ல­கமும் கொழும்­பி­லி­ருந்து அனுப்­பப்­பட்ட விசேட அலு­வ­ல­கமும் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இதன்­போது பாலியல் இலஞ்சம் தொடர்­பான பல சம்­ப­வங்கள் இனம் காணப்­பட்­ட­தாக குறிப்­பிட்­டுள்­ளனர்.
கண­வனை இழந்த பெண் ஒரு­வரே இவ்­வாறு முறைப்­பாடு செய்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இதே­வேளை வேறு பல­ரி­டமும் இவ்­வாறு பாலியல் இலஞ்சம் கோரப்­பட்­டுள்­ள­தா­கவும் சிலர் இந்த கோரிக்­கை­க­ளுக்கு இணங்கி சென்­ற­தா­கவும் தெரிய வரு­கின்­றது.
விடு­முறை நாட்­களில் அவர்கள் குறிப்­பிடும் இடத்­துக்கு சென்று மேல­தி­கா­ரியை சந்­தித்தால் இல­குவில் நிதியை பெற்­றுக்­கொள்­ளலாம் என தொழில் நுட்ப அலு­வலர் ஒருவர் குறித்த பெண்­ணிடம் சொன்­ன­தாக இந்த பெண் தெரி­வித்­துள்ளார்.
வீட்­டுத்­திட்ட பணத்தை உரிய நேரத்தில் தரு­வ­தில்லை எனவும் மீறி தாம் கேட்டால் மனி­தா­பி­மா­ன­மற்ற முறையில் பேசி மிரட்­டு­கின்­றார்கள் எனவும் வீட்­டுத்­திட்ட பய­னா­ளிகள் தெரி­விக்­கின்­றனர்.
இது­வரை பாலியல் இலஞ்சம் உள்­ளிட்ட 25 முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ள­தாக செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
இவற்றின் மீது தங்களால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது எனவும் தலைமைக்காரியாலயம் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :