Featured Home (TOP)

Recent Comments

Thursday, November 26, 2015

avathani Media Network

25 கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு 50 வீத மானியத்துடன் -ஒரு பண்ணையாளருக்கு தலா 20 கோழிக் குஞ்சுகள் வீதம் வழங்கி வைப்பு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தெரிவு செய்யப்பட்ட கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு கோழிக் குஞ்சுகள்  வழங்கப்பட்டு வருகின்றது.

மேற்படி கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு கோழிக் குஞ்சுகளை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் 24 செவ்வாய்க்கிழமை காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி திருமதி .டுஜித்திரா லிங்கேஸ்வரனினால் தெரிவு செய்யப்பட்ட கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு கோழிக் குஞ்சுகள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த கோழிக் குஞ்சுகள் பீ.எஸ்.டி.ஜி திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள 25 கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு 50 வீத மானியத்துடன் ஒரு பண்ணையாளருக்கு தலா 20 கோழிக் குஞ்சுகள் வீதம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :