(ஜுனைட்.எம்.பஹ்த்)
துருவம் ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் ஒரு நாள் ஊடகச் செயலமர்வு எதிர்வரும் 12.12.2015 சனிக்கிழமை அன்று சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இம் முழு நாள் ஊடகச் செயலமர்வில் பிரபல வானொலி-தொலைக்கா
ட்சி சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர், வளவாளர் சிராஜ் மசூர் ஆகியோர் கலந்துகொண்டு விரிவுரையாற்றுவதுடன் செயன்முறை பயிற்சிகளும் வழங்கப்படவிருக்கின்றன.
மேலும், ஊடகம் சார்ந்த உப தலைப்புகளுடனான சிறு விளக்கவுரைகளும் இங்கே இடம்பெறும்.
இளைஞர்,யுவதிகள், மாணவர்கள்,ஊடகவியலாளர்கள், ஊடகத்துறையில் பணியாற்ற விரும்புகின்றவர்கள் மற்றும் ஊடகத் துறை சார்ந்து மேலதிக அறிவை விருத்தி செய்து கொள்ள விரும்பும் அனைவரும் இந்த முழு நாள் ஊடகச் செயலமர்வில் பங்குபற்ற முடியும்.
அறிவுப்புத் துறை சார்ந்து கலந்து கொள்ளும் இளம் அறிவிப்பாளர்களுக்கு இச்செயலமர்வில் சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களின் சிறப்பு வழிகாட்டலுடன் கூடிய அறிவிப்புத் துறை நுணுக்கங்கள் பயிற்றுவிக்கப்படவிருக்கின்றன.
கலந்து கொள்ளும் மாணவர்களின் ஊடகம் சார் திறமையை இங்கே வெளிப்படுத்தி துறைசார்ந்தவர்க
ளால் மேலும் செப்பனிட்டுக் கொள்ளவும் வாய்ப்புகள் வழங்கப்படும். நிறைவில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
பதிவுகளுக்கும்,மேலதிக தொடர்புகளுக்கும்- 077 407 3361, 0777 226 760
