தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் இலங்கையில் நடந்த கடத்தல்கள், கொலை மற்றும் கொள்ளைகளின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய இருப்பதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தன்னை பழி வாங்க அரசாங்கத்தினால் ஏவிவிடப்பட்டுள்ள ஒருசிலரே இவ்வாறான பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாகவும் கோட்டாபய தெரிவித்தார்.
அத்துடன் தாம் செய்த குற்றங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளும் வகையிலேயே அவர்கள் என்மீது பொய்யான குற்றத்தை சுமத்துகின்றனர்’ எனவும் அவர் குறிப்பிட்டார்.
