( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் கமுஃஅல்-மதீனா மகா வித்தியாலயத்தில் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களையும், கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பிரதி அதிபர் எம்.எச்.எம்.ஏ.பதீயூ தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலய கணக்காளர் எல்.ரி.சலிதீன் பிரதம அதிதியாகவும், நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், வித்தியாலய அதிபர் எஸ்.அகமது ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு, மாணவர்களையும், கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவித்தனர்.







