(மரியமின் புத்திரன்)பொத்துவில் மஸ்ஜிதுல் முஸ்லிமீன் ஜும்ஆபள்ளிவாசல் மற்றும் தில்ஷாத் அஹமத் பௌண்டேசன் இணைந்துவழங்கிய இரத்ததான முகாம் 2015-11-22ம் திகதி பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் காலை 8.00 மணிதொடக்கம் நன்பகல் 12.00 மணிவரை இடம்பெற்றது. பொத்துவில்
ஆதாரவைத்தியசலையில் இடம்பெற்ற இலவச இரத்ததான நிகழ்வுக்கு அதிகளவான சுகதேகிகள் வருகை தந்திருந்தபோதும் இரத்தவங்கியின் இடப்பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலை நிருவாகத்தினரால் குறிப்பிட்டளவானோரிடமிருந்தே இரத்தம் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் பொத்துவில் இரத்ததான அமைப்பின் அமைப்பாளர் எம்.எஸ்.எம்.அப்துல் மலீக்(S.P.H.I) நன்றிகளைத் தெரிவிக்கின்றார்.

