ஜனாதிபதி விஞ்ஞான விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு பத்தரமுல்லை வாட்டஸ் எஜ் ஹோட்டலில் இடம்பெற்றது.இந்நிகழ்வை விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டு விருது வழங்கி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது. களனி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக கடமையாற்றிய தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தா் முஹம்மட் நாஜிம் 2013 ம் ஆண்டு விஞ்ஞான பதிப்பு ஒன்று வெளியிட்டமைக்காக இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் விருது வழங்கி கொளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


