அரச அதிகாரிகள் யாராவது லஞ்சம் பெற்றுக்கொண்டால் அது தொடர்பில் 1954 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு இலஞ்ச, ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தற்பொழுது ஆணைக்குழுவில் அதிகாரிகளின் பற்றாக்குறை நிலவுகின்றது.
இதனால், விசாரணைகளும் தாமதப்படுகின்றன. கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாகவும் ஆணைக்குழுவின் ஆணையாளர் சந்திரனாத் நெவில் குருகெ தெரிவித்துள்ளார்.
