( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சம்மாந்துறை சமூகப் பொலிஸ் பிரிவின் கீழ் செயற்பட்டு வரும் 51 சிவில் பாதுகாப்புக் குழுக்களினதும் கடந்த கால செயற்பாடுகள் மீளாய்வு செய்யப்படுதலும், எதிர்கால முன்னெடுப்புக்களும் எனும் தொனிப் பொருளிலான ஆலோசனை மாநாடு இன்று சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.
சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.எம்.உபுல் பியலால் தலைமையில் இடம் பெற்ற இம்மாநாட்டில்; கல்முனைப் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியேட்சகர் ரி.எம்.ஜே.காமினி தென்னகோண் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இதில் கலந்து கொண்ட சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், உதவிப்பொலிஸ் அத்தியேட்சகர் காமினி தென்னகோண், சிவில் பாதுகாப்பு மத்திய குழுத் தலைவர் ஐ.ஏ.ஜப்பார், சமூகப் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எம்.அமீர் ஆகியோர் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் சம்மந்தமான தகவல்களைப் பெற்றுக் கொண்டதோடு கடந்த காலங்களில் இக்குழுக்களின் செயற்பாடுகள் பற்றி மீளாய்வு செய்ததோடு, எதிர்காலத்தில் மேலும் வெற்றிகரமாக இதனைச் செயற்படுத்துவதற்கான முன்னெடுப்புக்களை மாநாட்டில் கலந்து கொண்டவர்களுடன் கலந்துரையாடி திட்டமிட்டனர்.
2011ம் ஆண்டுகளில் காணப்பட்ட பல்வேறு சமூக விரோதச் செயல்கள் தற்போது(2015) வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், அதற்கு இவ்வாறான சிவில் பாதுகாப்புக் குழுக்களின் சிறப்பான செயற்பாடுகளே காரணம் என்று பாராட்டிய உதவிப்பொலிஸ் அத்தியேட்சகர் காமினி தென்னகோண் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:-
'நாட்டில் சாந்தி, சமாதானம், நீதி, நேர்மை, சமத்துவம் போன்ற நல்ல தன்மைகளைப் பாதுகாக்கவே பொலிஸ் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மக்களுக்கச் சேவை செய்யாத பொலிசார் இப்பிரதேசத்தில் இருக்கத் தேவையில்லை. அவர்களுக்குச் சட்டநடவடிக்கை எடுக்கப்படும். எனவே தவறான செயற்பாடுகள் கொண்ட பொலிசார் பற்றி மக்கள் எமக்கு அறியத்தர வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.
இம்மாநாட்டில் பாதுகாப்பு உயரதிகாரிகள், மும்மதத் தலைவர்கள், மதவழிபாட்டு நிருவாகத்தினர், சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள், கிராம சேவகர்கள், சமூக சேவையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
சம்மாந்துறை சமூகப் பொலிஸ் பிரிவின் கீழ் செயற்பட்டு வரும் 51 சிவில் பாதுகாப்புக் குழுக்களினதும் கடந்த கால செயற்பாடுகள் மீளாய்வு செய்யப்படுதலும், எதிர்கால முன்னெடுப்புக்களும் எனும் தொனிப் பொருளிலான ஆலோசனை மாநாடு இன்று சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.
சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.எம்.உபுல் பியலால் தலைமையில் இடம் பெற்ற இம்மாநாட்டில்; கல்முனைப் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியேட்சகர் ரி.எம்.ஜே.காமினி தென்னகோண் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இதில் கலந்து கொண்ட சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், உதவிப்பொலிஸ் அத்தியேட்சகர் காமினி தென்னகோண், சிவில் பாதுகாப்பு மத்திய குழுத் தலைவர் ஐ.ஏ.ஜப்பார், சமூகப் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எம்.அமீர் ஆகியோர் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் சம்மந்தமான தகவல்களைப் பெற்றுக் கொண்டதோடு கடந்த காலங்களில் இக்குழுக்களின் செயற்பாடுகள் பற்றி மீளாய்வு செய்ததோடு, எதிர்காலத்தில் மேலும் வெற்றிகரமாக இதனைச் செயற்படுத்துவதற்கான முன்னெடுப்புக்களை மாநாட்டில் கலந்து கொண்டவர்களுடன் கலந்துரையாடி திட்டமிட்டனர்.
2011ம் ஆண்டுகளில் காணப்பட்ட பல்வேறு சமூக விரோதச் செயல்கள் தற்போது(2015) வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், அதற்கு இவ்வாறான சிவில் பாதுகாப்புக் குழுக்களின் சிறப்பான செயற்பாடுகளே காரணம் என்று பாராட்டிய உதவிப்பொலிஸ் அத்தியேட்சகர் காமினி தென்னகோண் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:-
'நாட்டில் சாந்தி, சமாதானம், நீதி, நேர்மை, சமத்துவம் போன்ற நல்ல தன்மைகளைப் பாதுகாக்கவே பொலிஸ் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மக்களுக்கச் சேவை செய்யாத பொலிசார் இப்பிரதேசத்தில் இருக்கத் தேவையில்லை. அவர்களுக்குச் சட்டநடவடிக்கை எடுக்கப்படும். எனவே தவறான செயற்பாடுகள் கொண்ட பொலிசார் பற்றி மக்கள் எமக்கு அறியத்தர வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.
இம்மாநாட்டில் பாதுகாப்பு உயரதிகாரிகள், மும்மதத் தலைவர்கள், மதவழிபாட்டு நிருவாகத்தினர், சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள், கிராம சேவகர்கள், சமூக சேவையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.