Featured Home (TOP)

Recent Comments

Tuesday, November 17, 2015

avathani Media Network

ஆளனிப் பற்றாக்குறை காரணமாக குவிந்து கிடக்கும் லஞ்சம், ஊழல் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள்

அரச ஊழியர்களுக்கு எதிரான 10,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் ஆளனிப் பற்றாக்குறை காரணமாக குவிந்து கிடப்பதாக லஞ்சம், ஊழல் தொடர்பாக குற்றச்சாட்டு க்களை விசாரிக்கும் ஆணைக் குழு தெரிவித்து ள்ளது.
800 ஆளனியினர் தேவைப்படும் இடத்தில் 154 அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். இதனால் விசாரணைகளை பூர்த்தி செய்வதில் தாமதமாவதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் தெரிவித்தார். இவ்வருடம் 4000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
மேலும் 6000 முறைப்பாடுகள் விசாரிக்கப்பட உள்ளன.
2001 ஆண்டு முதல் பல விசாரணைகள் மேற் கொள்ளப்பட உள்ளன.
லஞ்சம், ஊழல் அற்ற நாடாக எதிர்வரும் மூன்றாண்டுகளில் இலங்கையை நாம் மாற்றுவோம்.
சகல முறைப்பாடுகளையும் விசாரித்து முடிப்போம் என்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
எமது பணிகளை இலகுபடுத்த சிவில் நிறுவனங்களின் ஒத்துழைப்பையும் நாம் பெற உள்ளோம்.
சர்வதேச ஊழல் ஒழிப்பு தினமும் அனுஷ்டிக்கப்படும் இத்தினத்துக்கு மக்கள் பங்களிப்பையும் நாம் பெற உள்ளோம்.
இந்த நிகழ்வின் நினைவாக விசேட நடைபவனி மேற்கொள்ளப்படும்.
விகாரமகாதேவி பூங்காவில் இருந்து சுதந்திர சதுக்கம் வரை இது நடைபெறும்.
 “I PAID THE BRIBE”  என்ற இணையத்தளமும் இதன்போது திறந்து வைக்கப்படும்.
டிசம்பர் 09 ஆம் திகதி மாலை 03 மணிக்கு இந்த நடைபவனி ஆரம்ப மாகும் என்றும் தில்ருக்ஷி டயஸ் தெரிவித்தார்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :