Featured Home (TOP)

Recent Comments

Friday, December 4, 2015

avathani Media Network

மீராபாலிக்கா தேசிய பாடசாலையில் நடைபெற்ற ஆடல்பாடலைக் கண்டித்து இன்று (04.12.2015) NTJ வெளியிட்ட துண்டுப்பிரசுரம்

மீரா பாலிகா மகா வித்தியாலய விவகாரத்தில் NTJ கையாண்ட வழிமுறை சரியானதா?


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
மீரா பாலிகா மகா வித்தியாலய விவகாரத்தில் NTJ கையாண்ட வழிமுறை சரியானதா?
அன்புள்ள சகோதரசகோதரிகளே! அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
அண்மையில் காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின விழா மற்றும் நான்கு மாடி ஆராதனை மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா என இரு விழாக்கள் நடைபெற்றதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். இவ்விழாவில் ஆலிம்கள்அரசியல்வாதிகள்ஊர் பிரமுகர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்வில் இஸ்லாத்திற்கு முற்றிலும் விரோதமான முறையில் 05ம் ஆண்டு பெண் மாணவிகள் மேடையேற்றப்பட்டு இசையுடன் கூடிய ஹிந்திப் பாடலுக்கு ஏற்ற வகையில் நடனம் ஆடிய நிகழ்வை உலமாக்களாகிய நாம் பார்வையிட்ட போது கடுமையாக அதிர்ச்சியடைந்தோம். சமூகத்தைப் பாதிக்கும் தீமைகளை யாராவது பகிரங்கமாக அரங்கேற்றினால் அது குறித்து சமூகத்தை எச்சரிக்கை செய்வது ஒவ்வொரு மார்க்க அறிஞன் மீதும் கட்டாயக் கடமையாகும். பல பெரியவர்கள் பிரசன்னமாயிருக்கும் ஒரு சபையில் அல்லாஹ்வின் அச்சமின்றி பகிரங்கமாக அரங்கேறிய இந்தக் கொடுமையை உரிய நேரத்தில் நாம் கண்டித்திருந்தோம். அல்ஹம்துலில்லாஹ்!

கண்டன உரையை ஆற்றிய மௌலவி M.C.M ஸஹ்றான் (மஸ்ஊதி) அவர்கள் தனது உரையில்'பாடசாலை என்பது கல்வியையும் ஒழுக்கத்தையும் போதிக்கும் இடமாகும். கல்வி பெறுவதற்காக வரும் மாணவிகளை ஹிந்திப் பாட்டிற்கு நடனமாட விடுவதும் அதை மேடையில் அரங்கேற்றி பெரியவர்கள் ரசித்துக் கொண்டிருப்பதும் ஜீரணிக்க முடியாத கேவலமான செயலாகும். இஸ்லாத்திற்கு விரோதமான இச்செயல் பகிரங்கமாக அரங்கேற்றுவதற்கு யாரெல்லாம் ஒத்துழைப்பு வழங்கினார்களோ அத்தனை ஆசிரிய ஆசிரியைகளும் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்எனக் கூறினார். அத்துடன் இந்த அநாச்சாரத்தை பகிரங்கமாக அரங்கேற்றிய அதிபர் ஆ.ஊ.ஆ.யு சத்தார் அவர்களை மௌலவி ஸஹ்றான் தனதுரையில் விழித்து 'உமது பொண்டாட்டி,பிள்ளைகளை இப்படி பகிரங்கமாக ஆட விடுவாயாஆட விடமாட்டேன் என்றால் மற்றவர்களுடைய பிள்ளைகளை மாத்திரம் எந்த நியாயத்தில் ஆட வைப்பது?' என்று காட்டமாகக் கேள்வி கேட்டார். இது அதிபர் சத்தார் அவர்களையோஅவரது மனைவிபிள்ளைகளையோ கேவலப்படுத்துவதற்காகக் கேட்கப்பட்ட கேள்வி அல்ல! மாறாக அதிபர் சத்தார் அவர்கள் தான் பகிரங்கமாக அரங்கேற்றிய நடன நிகழ்வின் பாரதூரத்தை அவர் பளிச்செனப் புரிய வேண்டுமென்பதற்காகத்தான் மேற்கண்ட கேள்விகள் கேட்கப்பட்டன.
இவ்வாறு குடும்பத்தை தொடர்புபடுத்தி கேள்வி கேட்கலாமா?
இஸ்லாம் வன்மையாகத் தடுத்த சமூகத் தீமைகளை பகிரங்கமாக அரங்கேற்றுபவர்களிடமும்அவ்வாறு அரங்கேற்ற ஆசைப்படுபவர்களிடமும் அத்தீமையின் பாரதூரத்தை உணர்த்த மேற்கண்டவாறு கேள்வி கேட்கலாம். இதற்கு பின்வரும் செய்தி சிறந்த சான்றாகும்.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து விபச்சாரம் செய்ய அனுமதி கேட்டார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் 'உன் தாயுடன் விபச்சாரம் செய்ய நீர் விரும்புவீராஉனது மகளுடன் விபச்சாரம் செய்ய நீர் விரும்புவீராஉனது சகோதரியுடன் விபச்சாரம் செய்ய நீர் விரும்புவீராஉனது சாச்சியுடன் விபச்சாரம் செய்ய நீர் விரும்புவீராஉனது மாமியுடன் விபச்சாரம் செய்ய நீர் விரும்புவீராஎன (அடுக்கடுக்காக) கேள்விகளைக் கேட்டார்கள். நூல்: அஹ்மத் 22211
மேற்கண்ட ஹதீஸில் விபச்சாரத்திற்கு அனுமதி கேட்ட அந்த மனிதருக்கு நபி (ஸல்) அவர்கள்'அனுமதி இல்லைஎன்று பொத்தம் பொதுவாகச் சொல்லியிருக்கலாம். அவ்வாறு சொல்லாமல் அவருக்கு 'பளிச்செனப்புரியும் வகையில் அவரது குடும்பப் பெண்களை தொடர்புபடுத்தி அவரிடமே கேள்வி கேட்டு புரிய வைக்கிறார்கள். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வினாத் தெடுத்ததால் அந்த மனிதரின் குடும்பத்தை நபி (ஸல்) அவர்கள் சந்திக்கு இழுத்து விட்டார்கள் என்பது அர்தமல்ல.
சமூகத் தலைவர்களை பகிரங்கமாக கண்டிக்கலாமா?
இஸ்லாம் வன்மையாகத் தடை செய்தசமுதாயத்தை சீரழிக்கும் தீமைகளை பகிரங்கமாக அரங்கேற்றுபவர் யாராக இருந்தாலும் அவர்களை அடையாளப்படுத்தி உரையாற்றலாம். அப்போதுதான் சமுதாயம் நல்லுணர்வு பெறும். சாதாரண பொதுமக்கள் செய்யும் சமூகத் தவறுகளை விமர்சிக்கும் பலர் சமுதாயத் தலைவர்கள் செய்யும் சமூகத் துரோகங்களை பகிரங்கமாக விமர்சிக்கத் தயங்குகிறார்கள். இந்நிலை குறித்து நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையைப் பாருங்கள்!
உங்களுக்கு முன்னிருந்த மக்களை அழித்ததெல்லாம் அவர்கள்தம்மிடையேயுள்ள உயர்ந்த(குலத்த)வன் திருடி விடும் போது அவனை (தண்டிக்காமல்) விட்டு வந்ததும்பலவீனமான(பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விடும் போது அவனுக்கு தண்டனை கொடுத்து வந்ததும்தான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி 4304
மேற்கண்ட ஹதீஸின் பிரகாரம் தவறு செய்பவர் உயர்ந்த அந்தஸ்துள்ள மனிதராக இருந்தாலும் அவரைக் கண்டிக்க நாம் பின்நிற்கக் கூடாது என்பது புலனாகிறது.
மட் மீரா பாலிகா மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திக் குழு வெளியிட்ட அறிக்கையில் உள்ள அறியாமைகள்!
பாடசாலை அபிவிருத்திக் குழு வெளியிட்ட அறிக்கையில் பாடசாலையின் கல்வித் தரம்,பாடசாலையின் சாதனைகள்அதிபர் சத்தார் அவர்கள் பொறுப்பேற்ற பின் ஏற்பட்ட மறுமலர்ச்சி என்று பல விடயங்களை பேசியுள்ளனர். இவைகளை நாம் மறுக்கவில்லை. நாம் முழுக்க முழுக்க கவனம் செலுத்துவதெல்லாம் முஸ்லிம் பாடசாலைகளில் ஒழுக்கம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதும் அத்துடன் இஸ்லாமிய விழுமியங்களுக்கு எவ்வகையிலும் அபகீர்த்தி ஏற்பட்டு விடக் கூடாது என்பதுமாகும். இப்போது அபிவிருத்திக் குழு தனது அறிக்கையில் சொன்ன அறியாமை வாதங்களை ஒவ்வொன்றாக அலசுவோம்.
அபிவிருத்திக் குழுவின் அறியாமை வாதம் 01பொதுவாக பாடசாலையில் இடம் பெறும் வைபவங்களை சிறுவர்களின் கலை நிகழ்வுகள் அலங்கரிப்பது இயல்பானதொன்றாகும்.
எமது பதில்: கலை நிகழ்ச்சிகளை இஸ்லாம் தடை செய்யவில்லை. ஆனால் நீங்கள் அன்று அரங்கேற்றிய கலை நிகழ்ச்சி இஸ்லாம் ஹராமாக்கிய கலை நிகழ்ச்சி என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. ஆபாசமான அர்த்தங்களைக் கொண்ட ஹிந்திப் பாடலை இசையுடன் ஒலிக்க விட்டு அதற்கேற்ப ஐந்தாம் ஆண்டு கல்வி கற்கும் மாணவிகளை (பருவ வயதை அடைந்த சிலரும் இருந்தனர் என்பது தனி விஷயமாகும்) டான்ஸ் ஆட விட்டமை சாதாரண கலை நிகழ்வாஇவ்வாறான தரங்கெட்ட நிகழ்ச்சிகளால் தான் உங்கள் பாடசாலை வைபவங்களை நீங்கள் அலங்கரிப்பீர்களா?சிந்தியுங்கள்!      
அபிவிருத்திக் குழுவின் அறியாமை வாதம் 02: கடந்த காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் பல தடவைகளில் இடம் பெற்றிருந்த போதும் அது தொடர்பில் எவ்வித கருத்துரைகளும் வழங்கப்படவில்லை.
எமது பதில்: இதற்கு முன்பாக உங்களது பாடசாலையில் இது போன்ற நிகழ்வுகள் நடை பெற்றமைக்கு நம்பத்தகுந்த நேரடி வாக்கு மூலங்களோவீடியோச் சான்றுகளோ எம்மிடம் இல்லை. யாரோ சொல்லும் செய்திகளைக் கேட்டு விமர்சித்து விட முடியாது! இந்த நடன நிகழ்ச்சிக்கு முன்பாக நீங்கள் நடாத்திய நடன நிகழ்ச்சிகளின் ஒளிப்பதிவுகள் எமக்குக் கிடைத்திருந்தால் அப்போதும் 'கலாசார சீரழிவுகுறித்து கடுமையான மார்க்கக் கண்டனத்தை வெளியிட்டிருப்போம். அல்லாஹ்வின் தீன் எப்போதெல்லாம் கேவலப்படுத்தப்படுகின்றதோ அப்போதெல்லாம் வெகுண்டெழுவது தான் ஈமானிய உணர்வு. தீமையை தட்டிக் கேட்பதில் கால வேறுபாடு இல்லை! உணர்வீர்களா?
அபிவிருத்திக் குழுவின் அறியாமை வாதம் 03: இத்தகைய கலை நிகழ்வானது எமது பாடசாலையில் மாத்திரமே முதன் முறையாக இடம் பெற்றது போன்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எமது பதில்: பல பாடசாலைகளில் கலை நிகழ்வு என்ற பெயரில் அநாச்சாரங்கள்மார்க்க அத்து மீறல்கள் நடை பெறுவதை பொதுப்படையாகவே நாம் கண்டித்துள்ளோம். காரணம் அவைகளுக்கான ஒளிப்பதிவு ஆவணங்கள் எமக்குக் கிடைக்கப் பெறுவதில்லை. நாம் கல்வி ரீதியாக உங்கள் பாடசாலையை விமர்சிக்கவில்லை. கல்வி மறுமலர்ச்சியில் சிறந்து விளங்கும் நீங்கள் 'கலைஎன்ற பெயரில் மேற்கத்தைய கலாசாரத்தை பாடசாலையில் புகுத்துகிறீர்கள்.
ஒழுக்கமும் கல்வியும் தேடி வரும் மாணவ சமுதாயத்தில் 'கலைஅபிநயம்என்ற பெயரில் நஞ்சை விதைக்கிறீர்கள். இன்னும் சொல்லப் போனால் உங்கள் பாடசாலையில் நிகழ்ந்ததைப் போன்ற ஹிந்திப் பாட்டு ஆட்டம் வேறு பாடசாலைகளில் நிகழ்ந்ததாக நாம் அறியவில்லை.
அபிவிருத்திக் குழுவின் அறியாமை வாதம் 04: மாணவர்களின் கல்விக்காக பல அர்ப்பணிப்புகளுடன் பாடுபடும் ஆசிரியர்களையும் பாடசாலையின் அதிபர் சத்தார் அவர்களையும் மௌலவி ஸஹ்றான் கேவலமாக வசை பாடியுள்ளார்.
எமது பதில்: மீரா பாலிகா ஆசிரியர்கள் அங்குள்ள மாணவர்களுக்குச் செய்யும் கல்விச் சேவையை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. எமது ஜமாஅத்தின் பிரச்சாரகர் மௌலவி ஸஹ்றானும் அதனை குறை கூறவில்லை. மௌலவி ஸஹ்றான் விமர்சித்ததெல்லாம் நீங்கள் அன்று பாடசாலையில் அரங்கேற்றிய இஸ்லாத்திற்கு முரணான ஆட்டம் பாட்டத்தை மாத்திரம் தான்! யாரெல்லாம் ஹிந்திப் பாட்டை ஒலிக்கச் செய்து நடனமாடும் பாவமான வேலைக்கு துணை போனார்களோ அந்த ஆசிரியர்களுக்கு மறுமையைச் சொல்லி அச்சமூட்டி எச்சரிக்கை செய்தார் அவ்வளவுதான்.
அபிவிருத்திக் குழுவின் அறியாமை வாதம் 05: சமூகத்தில் தவறுகள் இடம் பெறுகின்ற போது அவை முறையாகவும் பொறுப்பு வாய்ந்த வகையில் அடுத்தவரின் கௌரவத்தை பாதிக்காதவாறு ஆக்கபூர்வமாக சுட்டிக்காட்டுவதே நாகரீகமானதும் இஸ்லாமிய வழிமுறையுமாகும்.
எமது பதில்: உங்கள் பாடசாலையில் இடம் பெற்ற அந்த மார்க்க அத்துமீறலை நாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கையாளவில்லை. நன்கு விசாரித்த பின்பே பிரச்சார மேடையில் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து விழிப்பூட்டினோம். உண்மையைச் சொல்லுங்கள்! இந்த நடன நிகழ்ச்சி மேடையில் அரங்கேருவதற்கு முன்னர் உங்களது பாடசாலை அதிபருக்கு 'இந்நிகழ்வு தேவையற்றதுஎன்று யாருமே உணர்த்தவில்லையாஎல்லா ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியை நடாத்த வேண்டுமென்றுதான் இருந்தார்களாஇவ்வாறான நிகழ்வுகள் குறித்து உங்கள் அதிபருக்கு அறிவுரை சொல்ல காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா உங்கள் அதிபரை இதுவரை அழைத்ததே இல்லையாபொறுப்பு வாய்ந்த வகையில் சுமுகமாக தவறுகளை சுட்டிக்காட்டினால் அதை காதில் வாங்குவதேயில்லை. மனச்சாட்சியை உலுக்கும் வகையில் நாலு கேள்வியைக் கேட்டு உரையாற்றினால் மட்டும் உறைக்கிறதே..இஸ்லாத்தின் கண்ணியத்தையும் கௌரவத்தையும் பாதிக்கும் வகையில் சமூகத் தீமைகளை பகிரங்கமாக அரங்கேற்றுபவர்களை அடையாளப்படுத்தி உரையாற்றுவதும் இஸ்லாமிய வழிமுறை தான் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்!
அபிவிருத்திக் குழுவின் அறியாமை வாதம் 06: தனிப்பட்ட புகழாரத்திற்காக அடுத்தவரின் மானத்தை படம் காட்டி ஏலத்தில் விற்பதும் தனிமனித மானங்களோடு விளையாடுவதும் சீர்திருத்தம் பேசும் நபிவழியை மறந்த மார்க்க அறிஞர்களின் மேதாவித்தனம்.
நமது பதில்: தனிப்பட்ட புகழாரத்திற்கு நாம் தஃவாப் பணி செய்யவில்லை. யார் என்ன நோக்கத்திற்காக தஃவாப் பணி செய்கிறார்கள் என்று ஊடுருவிப் பார்க்கும் அதிகாரம் யாருக்கும் வழங்கப்படவில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'நான் பிறருடைய வயிற்றைக் கிழித்துப் பார்க்கவோ உள்ளங்களில் ஊடுருவிப் பார்க்கவோ நபியாக அனுப்பப்படவில்லை' (பார்க்க: புஹாரி )
'அடுத்தவரின் மானத்தை படம் காட்டி ஏலத்தில் விற்பதுஎன்ற உங்கள் வாசகம் உங்களின் வக்கிரப் புத்தியைக் காட்டுகிறது. அதிபர் சத்தாரின் சொந்தப் பிரச்சனையை நாம் மேடையில் பேசவில்லை. அவர் இஸ்லாம் ஹராமாக்கிய இசையைப் போட்டு மேடையில் பெண் மாணவிகளை ஆட்டம் போட வைத்ததன் மூலம் இஸ்லாத்தை ஏலத்தில் போட்டு விற்றார். அதை நாம் உரிய வேளையில் பொறுப்புணர்வுடன் தட்டிக் கேட்டோம். ஆனால் அவர் அதற்காக மன்னிப்புக் கோரவில்லை. அவர் சார்பாக நீங்களும் 'இசைநடனம் போன்றவை ஹராம் தான்'என்று ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. தான் அரங்கேற்றிய ஹராமான செயலை நியாயப்படுத்துவதில் அவரும்அவருக்கு எப்படியாவது அனுதாபம் தேடிக் கொடுத்து விட வேண்டுமென்பதில் நீங்களும் குறியாக இருக்கிறீர்கள். இதன் மூலம் ஏலத்தில் போவது உங்களின் மானம் தான்.
அபிவிருத்திக் குழுவின் அறியாமை வாதம் 07: சீர்திருத்தம் பெற வேண்டிய தங்களால் சீரழிந்து போனது எமது கல்விச் சமூகத்தின் மனங்களும் மானங்களும் மட்டுமல்ல மனித நேயமிக்க இஸ்லாமிய மார்க்கமுமே!
நமது பதில்: கல்விச் சமூகத்தை இசைபாட்டுகூத்து என்று நீங்கள் சீரழித்து விட்டு அதை அறிவுரைகளாலும்கண்டனங்களாலும் சீர்திருத்தும் எம்மை நோக்கி 'கல்விச் சமூகத்தை சீரழித்ததாகப்'புலம்புவது எவ்வகையில் நியாயம்இஸ்லாம் மனித நேயமிக்க மார்க்கமென்று தெரிந்த உங்களுக்கு இஸ்லாத்தில் கூத்து கும்மாளம் இல்லை என்று தெரியவில்லையாசீர்திருந்த வேண்டியவர்கள் வேறு நபர்களை விட ஆசிரியர்களான நீங்கள் தான் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்!
அபிவிருத்திக் குழுவின் அறியாமை வாதம் 08: விமர்சனங்கள் தூயநோக்கத்துடன் குறைகளை மாத்திரம் கொண்டிருக்காமல் நிறைகளையும் நிறைவாகக் கொண்டிருப்பதே ஒரு விமர்சகனுக்கு அழகாகும்.
நமது பதில்: எமது விமர்சனங்கள் யாரையும் திருப்திப்படுத்த செய்யப்படவில்லை. உள்ளங்களை அறிந்தவன் அல்லாஹ் மாத்திரமே! அவனே கூலி தரப் போதுமானவன். உங்கள் பாடசாலையில் இடம் பெற்ற மார்க்க விரோத செயற்பாட்டை கண்டிக்கும் நாம் உங்கள் நிறைகளை எங்குமே மறுக்கவில்லை. சொல்லக் கூடிய தேவை ஏற்பட்டால் அவற்றைச் சொல்வோம் இன்ஷாஅல்லாஹ். நிறைகளைச் சொல்லி புகழ்பாட நிறையப் பேர் இருக்கிறார்கள். குறைகளை தைரியமாகக் கண்டிக்கத்தான் ஆட்கள் இல்லை! கண்டித்தால் பகையுணர்வு ஏற்படும் என்றே அஞ்சுகின்றனர். எம்மைப் பொருத்தமட்டில் மீரா பாலிகா மகா வித்தியாலயத்துடன் தனிப்பட்ட எந்த விரோதமும் கிடையாது. அதனுடைய கல்வி வளர்ச்சியைக் கண்டு மகிச்சியடைகிறோம். ஆனால் இஸ்லாத்தை பகிரங்கமாகக் கேவலப்படுத்தும் மார்க்க விரோதச் செயல்களை மீரா பாலிகாவோ வேறு எந்த பாடசாலைகளோ மேற்கொண்டால் அவற்றை கண்டிக்கவும் பின்நிற்க மாட்டோம் இன்ஷாஅல்லாஹ்.
அபிவிருத்திக் குழுவின் அறியாமை வாதம் 09: ஜாஹிலிய வழக்கத்தில் அடுத்தவரை இழிவுபடுத்தும் அநாகரீக கருத்துக்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
நமது பதில்: ஜாஹிலிய வழக்கத்தில் நாம் யாரையும் இழிவுபடுத்தவில்லை. ஆனால் நீங்கள் தான் ஜாஹிலிய கால வழக்கத்தில் பாடல்களைப் போட்டு பெண் பிள்ளைகளை ஆட வைத்து ரசித்தீர்கள். நீங்கள் செய்த மார்க்க அநியாயத்தை அநியாயம் என்று உறைக்கும் வகையில் நாலு கேள்வி கேட்டால்'அநாகரீகமான கருத்துக்கள்என்று எங்களை விமர்சிக்கிறீர்கள்! ஆனால் நீங்கள் அன்று முஸ்லிம் பாடசாலையில் போட்ட ஹிந்திப் பாட்டின் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா?
Saree ke fall sa kabhi match kiya re
உன் சேலையின் கரைப்பட்டியை போல என்னை நீ தேர்ந்தெடுத்தாய்
Kabhi chhod diya dil kabhi catch kiya re
சிலநேரம் என் இதயத்தை விட்டு விடுகிறாய்
சிலநேரம் அதை பிடித்துகொள்கிறாய்
Touch karke touch karke touch karke
என்னை தொட்டுக்கொண்டே ...
Kahaan chal di bach kar ke
என்னை விட்டு எங்கே தப்பி ஓடுகிறாய்
Touch karke> touch karke> touch karke dil se dil attach kiya re
நீ அதை தொட்டபின்பு உன் இதயத்தை என்னோடு இணைத்துக்கொண்டாய்
(இப்படி அந்த பாட்டு ஒரு பெண்ணின் மீது இச்சை கொண்டு ஒரு ஆண் படிக்கிறான்.)
இப்போது சொல்லுங்கள்! அநாகரீகமான கருத்துக்களை வெளியிட்டது நாங்களாநீங்களாஇந்தப் பாடல் மூலம் மீரா பாலிகா இந்த சமூகத்திற்குச் சொல்லும் செய்தி என்னஉங்கள் பாடலும் பாடலுக்கேற்ற ஆடலும் தான் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அபிவிருத்திக் குழுவின் அறியாமை வாதம் 10: அந்த வகையில் எமது பாடசாலையின் நற்பெயருக்கும் அதன் அதிபர்ஆசிரியர்களின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட கருத்துக்களையும் விமர்சனங்களையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
நமது பதில்: எமது சத்திய மார்க்கமாகிய இஸ்லாத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இசைமோசமான அர்த்தம் கொண்ட பாடல்ஆட்டம் போன்ற கேடு கெட்ட செயல்களை பகிரங்கமாக அரங்கேற்றிய மீரா பாலிகா அதிபரையும் அதற்கு உறுதுணையாக இருந்த அத்தனை பேரையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அன்புள்ளவர்களே! இஸ்லாமிய அழைப்புப் பணியில் மிருதுவான பக்கங்களும் மென்மையான அறிவுரைகளும் உள்ளன. ஆனால் இஸ்லாத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து முஸ்லிம் சமூகத்தை கெடுத்து நாசமாக்கும் கைங்கரியங்களை யாராவது பகிரங்கமாகச் செய்தால் அதற்கெதிராக ஜனநாயக வழியில் எமது கண்டனங்களை உரிய முறையில் பதிவு செய்ய வேண்டும். எவ்வளவு தான் வேத வசனங்களைச் சொல்லி எச்சரிக்கை செய்தாலும் சில படித்த மேதாவிகளுக்கு விளங்குவதில்லை. கடந்த 03.12.2015அன்று (நேற்று) காத்தான்குடி தேசிய பாடசாலையின் 85வது வருட பூர்த்தியை முன்னிட்டு இசை கச்சேறி அரங்கேறியுள்ளமை அனைவருக்கும் தெரிந்ததே! எம்மை எதிர்க்க வேண்டுமென்பதற்காக மேலும் மேலும் தவறு செய்யும் ஆசிரியர் குலாமை அல்லாஹ் தான் திருத்த வேண்டும்!
வெளியீடு: தேசிய தவ்ஹீத் ஜமாஅத்(Nவுது) 296மீன்பிடி இலாகா வீதி,புதிய காத்தான்குடி-03
04.12.2015

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :