Featured Home (TOP)

Recent Comments

Friday, December 4, 2015

avathani Media Network

மஹிந்த தப்பிக்க இடமளிக்க முடியாது: மைத்திரி சூழுரை

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மஹிந்தவை சுற்றியிருந்தவர்கள் செய்த ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்த அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை தண்டிக்காது தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களிலிருந்து மஹிந்தவினால் தப்பித்துக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் தேவையற்ற செலவுகளை முழு அளவில் கட்டுப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பெரும் படைகளுடன் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமது பிள்ளைகள் மற்றும் மனைவிக்கு ஹெலிகொப்டரில் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை எனவும், ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றிய தேவையற்ற பணியாளர்கள் பலர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும்வும், வாகனங்கள் பெருமளவானவை அமைச்சுக்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக்கொண்ட கடந்த அரசாங்கம் அந்த பலத்தை மக்களின் நலனுக்காக பயன்படுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :