தேசிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 10 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பணவு எதிர்வரும் ஜனவரி முதல் மூன்று கட்டங்களாக அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும் என பிரமர் ரணில் விக்கிரமசிங்க தனது விசேட உரையில் தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தில் சேர்த்து கொள்ளப்படும்.
மேலும் அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் ஒருபோதும் இரத்து செய்யப்பட மாட்டாது
இதேவேளை தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு எதிர்வரும் மே மாதத்திற்கிடையில் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
