(நமது நிருபர்)
மருத்துவச் சான்றிதழ் இல்லாமல் சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் உணவகங்களில் பணிபுரிந்த 13 பேர் சுகாதார அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பணிமனை பொது சுகாதார அதிகாரி எஸ்.ராஜா ரவிவர்மா தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சூழலில் அமைந்துள்ள ஹோட்டல்கள்இ உணவகங்கள்இ சிற்றுண்டி சாலைகள் பொதுசுகாதார அதிகாரிகளினால் நேற்று மாலை சுற்றிவளைக்கப்பட்டன.அதன் போது சுகாதார அமைச்சின உணவுச்சட்டத்தின் ஓழுங்கு விதிகளுக்கமைய மருத்துவச் சான்றிதழின்றி கடமையில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
;கைதானவர்கள் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை கடும் நோயுடன் பணிபுரிந்த சில ஹோட்டல் பணியாளர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.