தெற்கு அதிவேக வீதியில் நேற்றைய தினம் மாத்திரம் பாரிய தொகை வருமானம் கிடைத்துள்ளதாக பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 16 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் டி.சி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வார இறுதி நாட்களுடன் சேர்ந்து வந்த போயா மற்றும் நத்தர் தின தொடர் விடுமுறை நாட்களில் அதிகளவான மக்கள் தமது ஊர்களுக்கு செல்வதற்கு மற்றும் சுற்றுலா செல்வதற்காக குறித்த பாதையை நேற்றைய தினம் பயன்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக நேற்றைய தினம் தெற்கு அதிவேக பாதையில் கொடகம வெளியேற்றத்தில் மூன்று கிலோமீற்றர் தூரத்திற்கு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.
