(மரியமின் புத்திரன்)
அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் அரச ஒசுசல மருந்தகத்தை நிறுவ எடுக்கும்முயற்சியானது பாராட்டப்படவேண்டியது. எனினும் அரச ஒசுசல அயைமயப்பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் பொத்துவில் ஓரவஞ்சிக்கப்பட்டதானது துரோகத்தனமாகும்.
சுகாதார ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்தியத்துறை பிரதியமைச்சர் கௌ-பைசல் காசிம் அவர்களினால் அம்பாறை மாவட்டத்தில் அரச ஒசுசல மருந்தகத்தை அமைப்பதற்கு தெரிவுசெய்யப்பட்டிருக்கும் பிரதேசங்களைப் பார்க்கின்றபோது கௌ- பிரதியமைச்சரின் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றியதும் அபிவிருத்தியில் ஓரவஞ்சனை காட்டப்படும் பிரதேசமுமான பொத்துவில் புறக்கணிக்கப்பட்டிருப்பது கௌ-பைசல் காசிம் அவர்கள் பொத்துவில் ஏழை மக்களுக்கும் அவருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் செய்யும் நன்றிக்கடனா?
அக்கரைப்பற்று , அட்டாளைச்சேனை, நிந்தவூர், சம்மாந்துறை, சாய்ந்தமருது, கல்முனை , மருதமுனையென்று மிக அருகருகே இருக்கும் பிரதேசங்களில் அரச ஒசுசல மருந்தகத்தை நிறுவ எடுக்கும் முயற்சியில் திருக்கோவில் , பொத்துவில் பிரதேசங்களிலும் நிறுவுவதற்கு பிரதியமைச்சரவர்கள் நடவடிக்கையெடுப்பாரா..?
