உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மேலும் கால தாமதமடையக் கூடும் என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எல்லை நிர்ணயம் தொடர்பிலான பரிந்துரைகள் இன்னமும் முழுமை பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லை நிர்ணயம் தொடர்பிலான பரிந்துரைகள் இன்னமும் முழுமை பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் திருத்தம் தொடர்பிலான பரிந்துரைகளும் சமர்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே, உரிய நேரத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்துவது சாத்தியப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
