மாட்டிறைச்சி கறையை
மழைவெள்ளம் கழுவிச் சென்றது..
பாவிகளை கண்ணீரால் கழுவி
காவிகளை தண்ணீரால் அடித்துச்
சென்றது..
முஸ்லிம் கறுப்பு புள்ளியை கரைத்து
வெறுப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துச்
சென்றது..
பாபர் பள்ளியை
தொலைத்த மக்கள்
யாவரையும்
பள்ளிக்கு அழைத்து பசியாறவைத்தனர்..
பள்ளிவாயல்
மடங்களாய் மாற,
தெருவோரம்
தொழும் இடங்களாகின..
படத்துக்காக
சிலர் உதவி நடிக்க,
படைத்தவனுக்காக
பலர் களமிறங்கினார்கள்..
நடிகர்களை
கடவுளாக்கியவர்கள்,
பாய்மார்களை
ரோல்மாடல்களாக மாற்றிக்கொண்டனர்..
இது
சிந்திக்க வேண்டிய தருணம்..
இந்தியா
வல்லரசாக கணவுகாணுங்கள் - என்ற
அப்துல்
கலாம் முஸ்லிமா..?
இந்தி தெரியாதவங்க
சாவுங்கடா – என்ற
ஆசிஷ் செளத்ரி இந்தியனா..?
மதத்தை
காட்டி, மொழியைக் காட்டி, சாதியை சொல்லி,
மாட்டைக்
காட்டி, நாட்டை கெடுக்கும் தேசத் துரோகிகள் யார்..?
காப்பாற்ற
போனவனும் சாதி கேட்டு, தீட்டு பார்த்திருந்தால் –
நிறைய
சவங்கள்தான் மிதந்திருக்கும்..
வெள்ளம் வழிந்தோட
வாழ்க்கை வெறிச்சோடுமோ – என
ஏங்கும்
எம் அன்பு
உறவுகளே – கவலைப்படாதீர்கள்..
நியாயமாய்
கிடைக்கவேண்டிய - அரச
நிவாரணங்களை
பெற்றுக் கொடுக்கும் வரை
எமது
போராட்டத்தை தொடர்வோம்..
அல்லா சாமி
– நல்லா வைக்கணும்..
சுபைதா
இல்லேனா – நாங்க இல்ல..
என் புள்ள
பேரு – யூனுஸ்..
நாம் பொழிந்த
அன்புமழை வரலாற்றை,
அடுத்த
தலைமுறைக்கும் சொல்லி வையுங்கள்..
இந்தியா
– நிச்சயம் வல்லரசாகிவிடும்..
