Featured Home (TOP)

Recent Comments

Thursday, December 17, 2015

avathani Media Network

வஸீம் தாஜுதீன் கொலை விவகாரத்தில் கெப்டன் திஸ்ஸவை விசாரிக்க தீர்மானம்

பிர­பல றக்பி வீர­ரான வஸீம் தாஜு­தீனின் மர்ம மரணம் தொடர்பில் தற்­போது யாழ். பிர­தேச இரா­ணுவ முகாம் ஒன்றில் சேவை­யாற்­று­வ­தாக கூறப்­படும் கப்டன் திஸ்ஸ அல்லது மேஜர் திஸ்ஸ என அழைக்­கப்­படும் எல­ஹர, தெஹி­வத்தை பிர­தே­சத்தைச் சேர்ந்த இரா­ணுவ வீர­ரிடம் விசா­ரணை நடத்த குற்றப் புல­னாய்வுப் பிரிவு தயா­ரா­கி­வ­ரு­வ­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
கடந்த 2012 மே 17 ஆம் திகதி அதி­காலை வேளையில் வஸீம் தாஜுதீன் பய­ணித்த அவ­ரது கார் நார­ஹேன்­பிட்டி சலிகா மைதா­னப்­ப­கு­தியில் எரிந்து கொண்­டி­ருந்த போது அதனை அணைக்க முற்­பட்­ட­வர்கள் வழங்­கி­யுள்ள வாக்குமூலங்கள் கிரு­லப்­ப­னையில் கைப்­பற்­றப்­பட்ட சீ.சீ.ரி.வி.காட்­சி­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அவ­ரிடம் இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அந்த தக­வல்கள் மேலும் தெரி­வித்­தன.
வஸீம் தாஜு­தீனின் கார் எரியும் போது அவ்­வி­டத்­துக்கு வந்த நபர் ஒருவர் அதனை அணைக்க காரை நோக்கி செல்லும் போது, அருகே போக வேண்டாம் என திஸ்­ஸவை ஒத்த உருவமைப்பைக் கொண்ட நபர் ஒருவர் தெரி­வித்­த­தாக பொலி­ஸா­ரினால் பதிவு செய்­யப்­பட்­டுள்ள வாக்கு மூலம் மற்றும் அந்த இடத்தில் இரு டிபண்டர் ரக வாக­னங்கள் இருந்­த­தா­கவும் அவை சிறிது நேரத்தில் மின்னல் வேகத்தில் மறைந்­த­தா­கவும் பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­பட்­டுள்ள வாக்குமூலங்­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது.
அத்­துடன் கிரு­லப்­பனை சந்­தியில் இருந்து பெறப்­பட்­டுள்ள சீ.சீ.ரி.வி.காட்­சி­களில் பல வாக­னக்கள் வஸீம் தாஜு­தீனின் வாக­னத்தை துரத்தும் நட­வ­டிக்கை பதி­வா­கி­யுள்­ளது.
வஸீம் தாஜுதீன் அந்த வாக­னங்­க­ளி­ட­மி­ருந்து தப்பி செல்ல முயற்­சிக்கும் காட்­சி­களும் அதனை தடுக்கும் காட்­சி­களும் இவ்­வாறு பதி­வா­கி­யுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
எவ்­வா­றா­யினும் இந்த காட்­சிகள் அடங்­கிய இறு­வட்டு தற்சமயம் கொழும்பு பல்­கலைக்கழகத்தின் கணினி மற்றும் தகவல் தொடர்­பாடல் பிரி­வி­னரால் ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டிய பொலிஸ் தலை­மை­யக உயர் அதி­காரி ஒருவர், அதன் அறிக்கை சில நாட்­க­ளுக்குள் கிடைக்கப் பெறும் என எதிர்­பார்ப்­ப­தா­கவும் தெரி­வித்தார்.
இத­னி­டையே கண்­டியில் இருந்து கொழும்பு நோக்கி அனைத்து பல­்கலை மாணவர் ஒன்­றியம் நடத்­திய பேர­ணி­யொன்றின் போது, மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்­த­தாக கூறப்­படும் ஜனக
பண்­டார மற்றும் சிசித்த பிரி­யங்­கர ஆகிய மாண­வர்­களின் மர­ணமும் கொலை­யெ­னவும் அத­னு­டனும் திஸ்­ஸ­வுக்கு தொடர்­பி­ருப்­ப­தா­கவும் சந்­தே­கங்கள் எழுப்­பப்­பட்­டுள்­ளன.
எவ்­வா­றா­யினும் அது தொடர்பில் இன்னும் போதிய சாட்­சி­யங்கள் இல்லை என தெரி­விக்­கப்­படும் நிலையில் மேர்வின் சில்­வாவின் மகன் மாலக சில்­வாவை நகர மண்­டப பகு­தியில் உள்ள பிர­பல ஆடை­யகம் அருகே தாக்­கி­யமை உள்­ளிட்ட சம்ப்­வங்­க­ளு­டனும் திஸ்­ஸவே தொடர்புபட்­டி­ருந்­த­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
இந் நிலை­யி­லேயே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு மிக நெருங்­கி­ய­வ­ராக இருந்­த­தாக கூறப்­படும் குறித்த இராணுவ வீரர் அப்போது ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் இருந்துள்ளதாகவும் அவரை விசாரணைக்கு உட்படுத்தும் பட்சத்தில் மேலும் பல தகவல்களை வெளிப்படுத்த முடியுமாக இருக்கும் எனவும் புலனாய்வுப் பிரிவு நம்புவதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் சுட்டிக்காட்டின.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :