ஊடகமொன்றின் செய்தி தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியாதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஏதேனும் ஓர் ஊடகத்தில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு அல்லது மாவட்ட நீதிமன்றில் முறைப்பாடு செய்ய முடியும்.
ஊடக செய்திகள் தொடர்பிலான முறைப்பாடுகளை பொலிஸ் நிலையங்கள் ஏற்கக் கூடாது.
இது குறித்த அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகமொன்றினால் அவதூறு செய்தி வெளியிடப்பட்டதாகக் கூறி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியாது.
இந்த குற்றச்சாட்டு குற்றவியல் சட்டத்தின் அடிப்படையிலானதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்கள் ஊடக அமைச்சர்இ பிரதி அமைச்சர் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற கூட்டமொன்றின் பின்னர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
