(ஜவ்பர்கான்)
சர்வதேச எயிட்ஸ் தினத்தையொட்டி இன்று காலை மட்டக்களப்பு நகரில் எயிட்ஸ் நோய்க்கெதிரான பதாதைகளை ஏந்தியவாறு பாரிய விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.
மாவட்ட சுகாதார சேவைகள் பணியகம் ஏற்பாடு செய்த இப்பேரணியில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார். மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவிற்கு முன்னால் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எம்.றஹ்மான் தலைமையின் பேரணி ஆரம்பமானது. வைத்தியர்கள், தாhதியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த பேரணி திருமலை வீதி, முனைவீதி, பிரதான வீதி, மகாத்மா காந்தி வீதியூடாகச்சென்று மாநகர சபை மண்டபத்தை அடைந்தது. அங்கு விழிப்புணர்வு கூட்டமும் இடம் பெற்றது.
virakesari.lk