கிண்ணியா பொலிஸ் பிரிவில் உப்பாறு பாலத்திற்கு அருகாமையில் இன்று ஞாயிறு (27) அதிகாலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சடலம் முள்ளிப் பொத்தானை சதாம் நகர் 44 வயது மதிக்கத்தக்க ஐந்து பிள்ளைகளின் தந்தையான ஏகாம்பரம்- அன்புச் செல்வன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர் தனது இரு நண்பர்களுடன் நேற்று முன் தினம் மாலை கண்டல் காடு கங்கையாற்றில் மீன் பிடிப்பதற்காக வலையை விட்டுச் சென்றுள்ளார்.
பின்னர் வலைகளில் மீன் கிடைத்துள்ளதா என பார்வையிட சென்றிருந்த வேளையில் இவர் காணாமல் போயுள்ளார்.
நேற்று கிண்ணியா பொலிஸார், கடற் படையினரின் உதவியுடன் இவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
இச் சடலம் முள்ளிப் பொத்தானை சதாம் நகர் 44 வயது மதிக்கத்தக்க ஐந்து பிள்ளைகளின் தந்தையான ஏகாம்பரம்- அன்புச் செல்வன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர் தனது இரு நண்பர்களுடன் நேற்று முன் தினம் மாலை கண்டல் காடு கங்கையாற்றில் மீன் பிடிப்பதற்காக வலையை விட்டுச் சென்றுள்ளார்.
பின்னர் வலைகளில் மீன் கிடைத்துள்ளதா என பார்வையிட சென்றிருந்த வேளையில் இவர் காணாமல் போயுள்ளார்.
நேற்று கிண்ணியா பொலிஸார், கடற் படையினரின் உதவியுடன் இவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
