அமெரிக்காவின் டெக்ஸாசில் ஏற்பட்ட சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
சூறாவளியின் தாக்கத்தினால் டெக்ஸாஸில் இடம்பெற்ற வாகன விபத்து காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் பல நகரங்களில் சூறாவளி தாக்கியுள்ளதுடன், 56 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வானிலிருந்து சில சிதைவுகள் அதிவேக வீதியில் வீழ்ந்துள்ளதாகவும் அமெரிக்க வானிலை அதிகாரிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், டெக்ஸாசில் விடுக்கப்பட்டிருந்த வௌ்ள மற்றும் சூறாவளி அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.