
படித்த வர்க்கம் என்ற மாற்றுத் தளத்தினை ஏற்படுத்தியிருக்கும் N.F.G.G. அமைப்பைக் கண்டு பயப்படும் முஸ்லிம் காங்கிரஸ்..!!

கடந்த வாரம் சாய்ந்தமருது அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி “சமகால அரசியலில் முஸ்லிம்களின் வகிபங்கு” என்கின்ற தொனிப்பொருளில் நடத்திய பொதுக்கூட்டங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. முதலில் கேள்விகள் கேட்டுக் கூச்சல் போட்டுக் குழப்பியவர்கள் பின்பு கற்களையும் நாற்காலிகளையும் எறிந்து மண்டப யன்னல்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

