
நிவாரண விலைகளில் பொருட்களை விற்பனை செய்யத் தவறிய வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்
கொழும்பு -
வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிவாரண விலைகளுக்கு அமைய பொருட்களை விற்பனை செய்யத் தவறிய 300 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர் சட்டத்தை மீறும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புக்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

.jpg)


