Featured Home (TOP)

Recent Comments

Wednesday, March 11, 2015

Unknown

உன்னிச்சை இருநூறுவில் கிராமத்தில் வாழும் குடும்பங்களுக்கு சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால் பொருட்கள் வழங்கி வைப்பு-

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை இருநூறுவில் கிராமத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பல்வேறு கஷ்டங்களோடு மீள்குடியேறி வாழ்ந்து வருகின்ற ஏழை முஸ்லிம் விவசாயிகளுக்கும், தமிழ் குடும்பங்கள் சிலருக்கும் சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால் 08.03.2015 கடந்த ஞாயிற்றுக்கிழமை பாவனைப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
Read More
Unknown

காத்தான்குடி- மஸ்ஜிதுல் குலபா-இர் ராஷிதீன் பள்ளிவாயலில் பாராட்டு வைபவம் –



(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி – மூன்றாம் குறிச்சி ஊர் (பழைய கல்முனை) வீதியில் அமையப்பெற்றதும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் வரலாற்றில் மிக தொன்மை வாய்ந்த பள்ளிவாயலுமான மஸ்ஜிதுல் குலபா-இர் ராஷிதீன் பள்ளிவாயலில் இயங்கிவரும் அல்-குர்ஆன் மத்ரசாவின் மாணவ,மாணவிகள்  கடந்த 2013 ,2014 ஆண்டுகளில் குர்ஆன் மதரசாக்கள் அபிவிருத்திச் சபையின் பொதுப் பரீட்சையில் சிறப்பான முறையில் சித்தியடைந்து- விருதுகளும், பரிசில்களும், சான்றிதழ்களும் பெற்றமைக்காக பாராட்டு வைபவம் ஒன்று இடம்பெறவுள்ளது.
Read More
Unknown

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தேசிய அமைப்பாளரின் தாயார் காலமானார்!


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தேசிய அமைப்பாளரும் அறிவிப்பாளரும், ஊடகவியலாளருமான இர்ஸாத் ஏ. காதரின் தாயார் இன்று புதன்கிழமை (11.03.2015) காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன். இவரது ஜனாஸா சம்மாந்துறையில் நாளை (12.03.2015) வியாழக்கிழமை காலை 7 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
Read More
Unknown

பாகிஸ்தானுக்கு வெள்ளைச் சந்தனம் கடத்த முயன்றவர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு வெள்ளைச் சந்தனம் கொண்டு செல்ல முயன்ற நபரை  கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான 58 கிலோகிராம் வெள்ளைச் சந்தனம் மீட்கப்பட்டுள்ளது.

Read More
Unknown

முறைப்பாட்டை வரவேற்கிறேன். நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன் - ஹிஸ்புல்லாஹ்


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இன்று தனக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டை தான் வரவேற்பதாகவும், அதற்காக நன்றி கூறுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இன்று பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாடு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்விடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;
Read More
Unknown

சங்காவின் சாதனைகளுடன் இலங்கை அணி வெற்றி

ஸ்கொட்லாந்து அணிக்கெதிரான போட்டியில் தொடர் சதமடித்து குமார் சங்கக்கார சாதனை படைக்க இலங்கை அணி 148 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
11 ஆவது உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில் இடம்பெற்று வருகின்றது.

அவுஸ்திரேலியாவின் ஹோபர்டில் இன்று இடம்பெற்ற உலகக் கிண்ண லீக் போட்டியில் குழு 'ஏ' யில் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும்  ஸ்கொட்லாந்து அணிகள் ஒன்றையொன்று சந்தித்தன.
Read More
Unknown

நீண்ட நாள் குறை நிறைவேறுகிறது . சம்மாந்துறை மாவடிப்பள்ளி பாலம் புணரமைப்பு பணி ஆரம்பம்      

( முஹம்மட் ஜெலீல்  )

சம்மாந்துறை மாவடிப்பள்ளிப் பாலம் மிக நீண்ட காலமாக புணரமைப்பு செய்யப்படாமல் இருந்ததால் பொதுமக்கள் போக்கு வரத்து செய்வதில் மிகவும் சிரமத்தை எதிர் கொண்டர்.

இதனை பல முறை சம்மந்தப்பட்டவர்களுக்கும் பொது மக்கள் சுட்டிக்காட்டி வந்தனர். இதற்கான தீர்வு தற்போது கிடைத்திருப்பதுடன் அதற்கான வேலைகளை தற்போது அரசாங்கம் மேற் கொண்டு வருகிறது.
Read More
Unknown

ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான முறைப்பாடுகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் NFGG இன்று சமர்ப்பித்தது

ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான முறைப்பாடுகளை இலஞ்சம் ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) இன்று (11.03.2015) கொழும்பில் கையளித்துள்ளது. இம்முறைப்பாடு NFGGயின் சிரேஷ்ட உறுப்பினரும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமாகிய ALM சபீல் அவர்களால் இன்று காலை 10.30 மணியளவில் கையளிக்கப்பட்டது.

Read More