Featured Home (TOP)

Recent Comments

Friday, March 13, 2015

Unknown

இலக்கிய உரையாடலுக்கான அமர்வு


"அகர ஆயுதம்" இலக்கிய உரையாடலுக்கும் சந்திப்பிற்குமான பொதுவௌியின் தொடர் அமர்வின் அடுத்த அமர்வு எதிர்வரும் 2015-03-22ம் திகதி பொத்துவில் பிரதேச சபைக் கட்டடத்தில் நடைபெறவிருக்கின்றது.

மூத்த இலக்கியவாதி கலையன்பன் அஸீஸ் தலைமையில் காலை 8.30 மணிதொடக்கம் 2.00 மணிவரை நடைபெறவிருக்கும் இந்நிகழ்வானது காலை, மதிய உணவுகளுடன் முழுநாள் சுவையான இலக்கிய அமர்வாக இடம்பெறவிருக்கின்றது. 
Read More
Unknown

அயலவர்கள் அனைவரும் எங்கே சென்றார்கள்? அளுத்கமைக் கலவரமும் அதன் பின்னரான நிலைமைகளும் அறிக்கை வெளியீடும்-கலந்துரையாடலும்

ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி


கடந்த 15.06.2014 அன்று இடம்பெற்ற அளுத்கமை வன்முறைச்சம்பவத்தினை ஆவணப்படுத்தும் வேலைத்திட்டங்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி  மேற்கொண்டிருந்தது.
இதன் ஒரு கட்டமாக மேற்படி வன்முறை தொடர்பான முழுமையான ஆவணத் தொகுப்பொன்றினை மேற்கொள்ள வேண்டும் என்ற தலைமைத்துவ சபையின் முடிவிற்கேற்ப ஆவணப்படுத்தும் பணியினை (LST) Law and Society Trust நிறுவனத்தினரை மேற்கொள்ளுமாறும், இதற்குரிய பூரண ஒத்துழைப்பையும் தாம் வழங்குவதாகவும் கேட்டுக்கொண்டதற்கினங்க அறிக்கையிடல் மற்றும் ஆவணப்படுத்தும் பணியினை LST நிறுவனம் அளுத்கமை, பேருவளை, தர்கா நகர், வெலிபன்ன போன்ற இன வன்முறையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடி கள விஜயங்களை மேற்கொண்டது.
Read More
Unknown

காத்தான்குடி -மஸ்ஜிதுல் குலபா இர் ராஷிதீன் அல்-குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான பாராட்டு வைபவம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்-எம்.எச்.எம். அன்வர்-, ஜூனைட் எம் பஹத்)      

காத்தான்குடி-03 ஊர் வீதியிலுள்;ள மஸ்ஜிதுல் குலபா இர் ராஷிதீன் பள்ளிவாயலின் கீழ் இயங்கிவரும் மஸ்ஜிதுல் குலபா இர் ராஷிதீன் அல்-குர்ஆன் மத்ரஸாவில் கடந்த 2013,2014 ஆண்டுகளில் குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்பட்ட அல் குர்ஆன் பொதுப் பரீட்சையில் சித்தியடைந்து விருதுகளையும், பரிசில்களையும்,சான்றிதழ்களையும் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு வைபவம் 13-03-2015 இன்று வெள்ளிக்கிழமை மஸ்ஜிதுல் குலபா இர் ராஷிதீன் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
Read More
Unknown

அரபு மொழி கற்கைகளை இலங்கையில் சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ப மேன்படுத்தல் அவசியமாகும்.! கலாநிதி ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்


(ஜூனைத் எம் பஹத்)

அறபு மொழி இன்று அரசியல் பொருளாதார இராஜதந்திர தேசிய பிராந்திய சர்வதேச கேந்திர முக்கியத்துவமிக்க பாதுகாப்பு நகர்வுகள், யுத்தம் சமாதானம் குறித்த நகர்வுகளுடன் பெரிதும் தொடர்புபட்டுள்ளது.

அறபு முஸ்லிம் முஸ்லிம் உலகுடனான எமது உறவுகளை பலப்படுத்துவதற்கும் அதன் மூலம் இந்த தேசத்தினதும் அமைதி, சமாதானம், சகவாழ்வு ,அபிவிருத்தி ஒருமைப்பாடு என்பவற்றிற்கு காத்திரமான பங்களிப்புக்களை செய்வதற்கும் அறபு மொழி பெரிதும் உதவுகின்ற மொழியாகும்.
Read More
Unknown

ஜும்ஆவின் சிறப்பு…


ஜும்ஆவுக்கு நேரத்தோடு பள்ளிக்குச் செல்வதால் கிடைக்கும் நன்மையை அறிந்தால் அதற்காக திட்டமிட்டு மற்ற வேலைகளை ஒதுக்கித். தள்ளிவிட்டு பள்ளிக்குச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்வார்கள். ”பெருந்துடக்கிற்காக குளிப்பது போன்று ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு)  செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.
Read More
Unknown

காத்தான்குடி மொடன் ஹாஜியாரின் மரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவளையும், துக்கமும் அடைகின்றேன்: பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி மொடன் ஜுவலர்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் அஹமட் மொஹைடீன் - மொடன் ஹாஜியாரின் மரணச் செய்தி கேட்டு தான் மிகவும் ஆழ்ந்த கவளையும், துக்கமும் அடைவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அவ் அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
Read More
Unknown

காத்தான்குடி பிரதேச பாடசாலைகளின் விளையாட்டுப்போட்டி எதிர்வரும் திங்கற்கிழமை காத்தான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில்



(-ஏஎல்.டீன்பைரூஸ்-)

காத்தான்குடி.பாலமுனை,காங்கயனோடை,சிகரம்,ஒல்லிக்குழம்,மஞ்சந்தொடுவாய்  சேர்ந்த சுமார் 30  பாடசாலைகளின் மாணவ மாணவிகளின் விளையாட்டுப்போட்டி எதிர்வரும் 16.03.2015திங்கற்கிழமை பி.ப.03.00 மணிக்கு காத்தான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில் கோட்ட கல்வி அதிகாரி எம்,ஏ.சீ.எம்.பதுர்தீன் தலைமையில் நடைபெற உள்ளது.
Read More
Unknown

முன்னால் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படாவிட்டால் NFGG தனது அரசியல் நடவடிககைகளைில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுமா..? கே.எல்.எம்.பரீட்

ஏ.எல்.டீன் பைரூஸ்
காத்தான்குடி: முன்னால் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படா விட்டால் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி  தனது அரசியல் நடவடிககைகளைில் இருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான கே.எல்.எம். பரீட் ஜே.பி  தெரிவித்தார். 
Read More