Wednesday, April 29, 2015
வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம் ! ஆரம்ப நிகழ்வு காத்தான்குடியில்
-எம்.எச்.எம்.அன்வர்-
வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம் எனும் தெரனிப்பொருளில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 3 பிரவுகளுக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று 167ஏ 167பி மற்றும் 165 ஏ கிராம சேவகர் பிரிவுகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டன
காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ் எச் முஸம்மில் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்

கூத்தாடிய மஹிந்த…! முடித்தார் மைத்திரி!
சென்ற வாரம் திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் ஏறத்தாழ மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வந்து விடுவார் எனும் அளவுக்கு பெரும் அலையை உருவாக்கியது போன்ற ஒரு பிரம்மை காணப்பட்டிருந்தது.
மஹிந்த ராஜபக்ச விசாரணைக்காக அழைக்கப்பட்டதற்காக பாராளுமன்றில் இரவு நேரம் தங்கிப் போராட்டம் நடாத்தினார்கள் மஹிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள்.
மறுநாள் வீதி ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது. இந்த இரு நாட்கள் நீடித்த சந்தோசத்தில் இலங்கையில் சிறுபான்மையினத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் அரசியல் நடாத்துவது தாம் தான் என நிரூபிக்கும் வகையில் ஐக்கியத்துக்கு எதிராக தனிச் சிங்களக் கொள்கையின் அடிப்படையிலான தேசியக் கொடியும் காட்சிப்படுத்தப்பட்டது.

மயூரன் சுகுமாரன், அன்ட்ரு சான் உள்ளிட்ட 8 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றப்பட்டது
இந்தோனேஷிய அரசாங்கம் மயூரன் சுகுமாரன், அன்ட்ரு சான் உள்ளிட்ட 8 கைதிகளின் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
மத்திய ஜாவா பிராந்தியத்திலுள்ள நுசக்கம்பங்கன் சிறைச்சாலை தீவில் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்ததன் மூலம் எட்டு பேரினதும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட அவுஸ்திரேலியா, பிறேசில், நைஜீரியா ஆகிய நாட்டைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.